அதீத
உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும்
ஈ.எஸ்.பி உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று.
சரி, , ஈ.எஸ்.பி , E.S.P (Extra Sensory Perception) உண்மைதானா? இல்லை, மனிதர்களின் ஆதீத கற்பனைகளின் விளைவா?
நாம்
ஆறறிவு கொண்டவர்கள். ஐம்புலன்களால் செயல்படுபவர்கள். பகுத்தறிவு எனப்படும்
அந்த ஆறாம் அறிவு மூலம் நாம் சிந்திக்கிறோம். முடிவுகள் எடுக்கிறோம்.
செயல்படுகிறோம். ஆனால் அதையும் மீறிய ஒன்றாக, புலன்களுக்கு அப்பாற்பட்டதாக,
ஏழாம் அறிவாக விளங்குவதுதான் ஈ.எஸ்.பி. உலகெங்கிலும் பல்வேறு ஈ.எஸ்.பி.
சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல ஈ.எஸ்.பி. மனிதர்கள், தங்களது
ஆற்றல்களைக் கொண்டு பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்துள்ளனர்.
குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவியுள்ளனர்.
சரி,
ஈ.எஸ்.பி என்றால் என்ன? பொதுவாக பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும்
ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக,
ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும்
அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக்
கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர்.
உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி
நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே
வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும்.
இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள்
உள்ளன.
வேறு ஒருவருடைய எண்ணங்களை, மனதில் உள்ள செய்திகளைப் படிக்கும் ஆற்றல் –
டெலிபதி எனப்படுகிறது. எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை
முன்கூட்டியே கூற முடிவதற்கு - Precognition என்று பெயர். இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance என்று பெயர். ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று
பெயர். ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள்
சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி,
அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometricஎன்று பெயர்.
இதில்
முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள்
போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை
மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி.
இனி
ஒரு உதாரண சம்பவத்தைப் பார்ப்போம். இது 1977ல் பிரிட்டனில் நடந்த சம்பவம்.
ஹில்ஹெட் லார்ட் ஜெக்கின்ஸ் என்பவர் தொழிலாளர் கூட்டமைப்புக் கட்சியின்
எம்.பியாக அப்போது இருந்தார். அவர் பணி நிமித்தமாக ரோம் நகரத்துக்குச்
சென்றிருந்தார். அங்கு ஒரு ஹோட்டலில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது
அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவரது சக எம்.பியும், நண்பருமான ஆண்டனி
கிராஸ்லாண்ட் என்பவர் தோன்றினார். அவர், இவரிடம், “நண்பா, நான் இன்னும்
சற்று நேரத்தில் இறக்கப் போகிறேன்.. விடைபெறுகிறேன். நன்றி” என்று
கூறிவிட்டு மறைந்து விட்டார்.
திடுக்கிட்டுக் கண் விழித்தார் ஹில்ஹெட். இது வெறும் சாதாரணக் கனவுதானா
அல்லது ஏதேனும் முன்னறிவிப்பா என்று புரியாமல் திகைத்தார். சிலமணி
நேரங்களில் ஆயிரம் மைல்களுக்கும் அப்பாற்பட்ட ஆக்ஸ்போர்டிலிருந்து அவருக்கு
ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது, ஆண்டனி இறந்து விட்டாரென்று.
தான் இறக்கப் போவதை எப்படியாவது தனது நண்பருக்குத் தெரிவித்துவிட
வேண்டுமென்று ஆண்டனியின் ஆழ்மனம் நினைத்ததன் விளைவுதான் அந்தக் கனவு என்பதை
உணர்ந்து கொண்டார் ஹில்ஹெட்.
மனிதர்கள்
மட்டும்தான் என்றில்லை. விலங்குகளுக்கும் கூட இத்தகைய ஈ.எஸ்.பி. ஆற்றல்கள்
உண்டு. குறிப்பாக மனிதர்களோடு நெருங்கி வாழும் நாய், பூனை போன்றவற்றிற்கு
இயல்பாகவே இந்த ஆற்றல்கள் அதிகம். அது பற்றிய சம்பவங்கள் வரலாற்றில் பதிவு
செய்யப்பட்டுள்ளன.
aug
23 1980 இல் ஆவியோடு பேசும் அலெக்ஸ் டான்ஸ் என்பவர் N .B .C ரேடியோவில்
விளக்க முடியாத நிகழ்வுகள் நிகழ்ச்சியில் பிவருமாறு குறிப்பிடுகின்றார்
"ஒரு பிரபலமான ராக் பாடகர் இறக்கப் போகிறார் அவரது இறப்பு எல்லோரையும்
பாதிக்கும் "
அவர் இதைக்குறிப்பிட்டு 13 நாட்களின் பின் ஜான் லென்னன் உலகின் மிகப்பிரபலமான பீட்டில்பாடகர் அவரது அப்பார்மென்ட் தில் வைத்து சுட்டு கொல்லப்படுகிறார் யார் இறக்கப்போகிரர்கள் என்று N .B .C 6 பெயர்களை வெளியிட்டிருந்தது இதில் முதலாவதாக இருந்தபெயர் "ஜான் லென்னன் "
கம்பெல் என்ற நடிகை உடல் நலமில்லாது படுத்த படுக்கையாக இருந்தார் ஷோர என்ற நடிகை அவருக்கு உதவி செய்தார் இதற்கு உபகாரமாக
கம்பெல் ஷோரவிற்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார் ஒரு நாரையின் வாட்டர் கலர் ஓவியம் பின் ஷோர ஹாலிவுட் சென்றுவிட கம்பெல் பிரான்ஸ் சென்றார் 1940 இல் தனது புதிய வீட்டில் குடிபுகுந்த ஷோர தாது கனவில் கம்பெல் தனது கல்லறையில் இருந்து கொண்டு பின்வருமாறு கேட்கிறார்
"நான் கொடுத்த பரிசை கண்டுபிடித்தாயா? நான் கொடுத்த படத்தின் பின்புறம் பார்த்தாயா?..விழித்துக்கொண்டபின் கம்பெல்தான் உயிரோடு இருக்கிறாளே என்று எண்ணியபடி ஓவியத்தின் பிரேமை ஐ கழற்றிய போது ஆச்சரியம்
அங்கெ ஒரு கோட்டுச் சித்திரம் இருந்தது மேக்ஸ் பேர்ம் என்ற பிரபல ஓவியர் வரைந்தது பின்புதான் ஷோர விற்கு விடயம் தெரிய வந்தது தான் கனவு கண்ட அதே தினத்தில் கம்பெல் இறந்துவிட்டார் என்று .......
யோசப் டியுலிஸ் என்பவர் 1969 ஜனவரி 16 இல் சிகாக்கோ நகரில் ஓர் ஹோட்டலில் நுழைந்து "பேப்பர் குடப்பா ரயில் விபத்தைப்பற்றி பாக்கணும்" என்றார்
விபத்தா?என்ன ரயில் ?என்ன விபத்து என்று சுற்றி இருந்தவர்கள் குழம்பினார்கள்
"அதுதாப்பா ...இங்க இருந்து தெற்கால 2 ரயில் பனிமூட்டத்தில ஒந்டொடொஅ ஒண்டு மோதிச்சே "என்றார்
ரேடியோ போட்டார்கள் இரவு 11 மணிவரை எந்த செய்தியும் இல்லை
இரவு 1 மணி ரேடியோ அலறியது "சிக்காகோ விற்கு தெற்கே இலியனாய் எக்ஸ்பிரஸ் ஐ சேர்ந்த 2 ரயில்கள் மோதி 47 பேர் காயம் 3 நபர்கள் பலி என்று செய்தி கூறியது
அவர் இதைக்குறிப்பிட்டு 13 நாட்களின் பின் ஜான் லென்னன் உலகின் மிகப்பிரபலமான பீட்டில்பாடகர் அவரது அப்பார்மென்ட் தில் வைத்து சுட்டு கொல்லப்படுகிறார் யார் இறக்கப்போகிரர்கள் என்று N .B .C 6 பெயர்களை வெளியிட்டிருந்தது இதில் முதலாவதாக இருந்தபெயர் "ஜான் லென்னன் "
கம்பெல் என்ற நடிகை உடல் நலமில்லாது படுத்த படுக்கையாக இருந்தார் ஷோர என்ற நடிகை அவருக்கு உதவி செய்தார் இதற்கு உபகாரமாக
கம்பெல் ஷோரவிற்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார் ஒரு நாரையின் வாட்டர் கலர் ஓவியம் பின் ஷோர ஹாலிவுட் சென்றுவிட கம்பெல் பிரான்ஸ் சென்றார் 1940 இல் தனது புதிய வீட்டில் குடிபுகுந்த ஷோர தாது கனவில் கம்பெல் தனது கல்லறையில் இருந்து கொண்டு பின்வருமாறு கேட்கிறார்
"நான் கொடுத்த பரிசை கண்டுபிடித்தாயா? நான் கொடுத்த படத்தின் பின்புறம் பார்த்தாயா?..விழித்துக்கொண்டபின் கம்பெல்தான் உயிரோடு இருக்கிறாளே என்று எண்ணியபடி ஓவியத்தின் பிரேமை ஐ கழற்றிய போது ஆச்சரியம்
அங்கெ ஒரு கோட்டுச் சித்திரம் இருந்தது மேக்ஸ் பேர்ம் என்ற பிரபல ஓவியர் வரைந்தது பின்புதான் ஷோர விற்கு விடயம் தெரிய வந்தது தான் கனவு கண்ட அதே தினத்தில் கம்பெல் இறந்துவிட்டார் என்று .......
யோசப் டியுலிஸ் என்பவர் 1969 ஜனவரி 16 இல் சிகாக்கோ நகரில் ஓர் ஹோட்டலில் நுழைந்து "பேப்பர் குடப்பா ரயில் விபத்தைப்பற்றி பாக்கணும்" என்றார்
விபத்தா?என்ன ரயில் ?என்ன விபத்து என்று சுற்றி இருந்தவர்கள் குழம்பினார்கள்
"அதுதாப்பா ...இங்க இருந்து தெற்கால 2 ரயில் பனிமூட்டத்தில ஒந்டொடொஅ ஒண்டு மோதிச்சே "என்றார்
ரேடியோ போட்டார்கள் இரவு 11 மணிவரை எந்த செய்தியும் இல்லை
இரவு 1 மணி ரேடியோ அலறியது "சிக்காகோ விற்கு தெற்கே இலியனாய் எக்ஸ்பிரஸ் ஐ சேர்ந்த 2 ரயில்கள் மோதி 47 பேர் காயம் 3 நபர்கள் பலி என்று செய்தி கூறியது
யோசப்
டியுலிஸ் என்பவர் ஒரு தீர்க்க தரிசி அல்ல சாதரண முடி திருத்தும் தொழிலை
செய்பவர் யாவர் இன்னும் பலவற்றை கூறி உள்ளார் 1967 நவம்பர் 25 அன்று ஒரு
கூற்றை கூறினார் ஒரு பாலம் இடிந்து விழப்போகிறது என்று மூன்று வரம் கழித்து
நவம்பர் 25 இல் ஓஹையோ நதியின் குறுக்காக இருந்த வெள்ளிப் பாலம் உடைந்து
விழுந்து 36 நபர்கள் பலியானார்கள் ....நாட்டில் கலவரம் வரப்போகின்றது என
1968 ஜனவரி 8 இல் கூறினார் ஏப்ரல் 7 இல் சிகாக்கோவில் பெரிய கலவரம்
ஏற்பட்டது இதை அடக்குவதற்கு 5000 மைய இராணுவப்படையினர் வரவேண்டி இருந்தது
....
1968
டிசெம்பர் 15 இல் டியுலிஸ் கென்னடி குடும்பத்திற்கு தண்ணீரில் கண்டம்
இருப்பதாக கூறினார் ...ஒரு பெண் நீரில் மூழ்குவதை தான் பார்த்ததாகவும்
கூறினார் ...1969 ஜூலை 18 இல் மேரிஜா என்னும் பெண் கென்னடியுடன் காரில்
சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் நீரில் மூழ்கி இறந்தாள் இது
கென்னடியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்தது மே 21 1969 இல்
டியுலிஸ் ஒரு விமான விபத்து இடம்பெறும் அதில் 79 பேர் இறப்பார்கள் என்று
கூறினார் செப்டம்பர் 9 இல் அலிகானி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி
நன்கு பைலட்கள் 79 பயணிகள் இறந்தார்கள் ...
அடுத்த
அமானுஷ்ய நிகழ்வு இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் பற்றியது இரண்டாம் உலக
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தனது வீட்டிற்கு மூன்று மந்திரிகளை
விருந்துக்கு அழைத்திருந்தார் அப்பொழுது விமானத்தாக்குதல் தொடக்கி
இருந்தது ...சாப்பிட்டுக்கொண்டிருந்த சர்ச்சில் திடீர் என்று எழுந்து
சமையல் சிப்பந்திகளிடம் சென்று சாப்பாட்டை டைனிங் டேபிள் இல் வைத்துவிட்டு
பாம் செல்ட்டர் இனுள் செல்லுமாறு கூறினார் அவ்வாறு அவர் கூறி விட்டு வந்து
அடுத்த மூன்றாவது நிமிடம் வீட்டின் பின் புறம் குண்டு விழுந்து சமையலறை
முற்றாக நாசமாகியது
இவரது
வாழ்வில் இன்னொரு சம்பவமும் நடந்தது லண்டனில் காரில் செல்ல தயாராகும் போது
அவர் எப்பொழுதும் உக்காரும் பக்க சீட் கதவு திறந்து அவருக்காக
காத்திருந்தது வழக்கத்துக்கு மாறாக அவர் வழமையாக இருக்கும் சீட்க்கு
எதிர்புற சீட்டில் சென்று அமர்ந்தார் கார் சென்று கொண்டிருக்கும் போது
குண்டு வெடித்தது கார் நிலை குலைந்தது ஒரு பள்ளத்தில் விழ இருந்தது
சர்ச்சில் உயர்ந்த இடத்தில் இருந்ததால் கார் சமநிலைக்கு வந்தது நான்
குண்டக்க இருந்ததால் தப்பித்தேன் என சர்ச்சில் கூறினார் ..இவைகள் எப்படி
நடந்தன என்று பின்னர் தான் எண்ணி வியப்படைந்தார்
சர்ச்சில்லின்
மனைவி இதை பற்றி கேட்ட பொழுது ஒரு குரல் நில் இந்த பக்கம் ஏறாதே என்று
கூறியது அதனாலதான் அவ்வாறு செய்தேன் என கூறினாராம் ...
1972
இல் ரிஜன்சி அச்சகம் black abductor என்ற நாவலை வெளியிடுகின்றது இதை
எழுதியவர் ஹரிசன் ஜேம்ஸ் ரஸ்க் இந்நாவல் தீவிரவாதிகளின் குழு வலது சாரி
சிந்தனையுள்ள ஒரு பெரிய பணக்காரனின் மகளை கடத்துகிறது அவள் ஒரு கல்லூரி
மாணவி பெயர் பாட்ரிசியா கடத்தப்படும் போது அவள் அவர்களை எதிர்க்கிறாள் பின்
அவர்களின் கொள்கைகளால் அவள் ஈர்க்கப்படுகிறாள் தனது போடோகளை தனது
தந்தைக்கு அனுப்பி வைக்கிறாள் இறுதியில் போலீஸ் அவர்களை சூழ்ந்து மடக்கி
அனைவரும் கொலை செய்கிறது இது நாவலின் கதை
இந்நாவல்
வெளியாகி ஒரு மாதத்தின் பின் ராண்டல்ஸ் ஹர்ஸ்ட் என்னும் என்னும் வலது சாரி
பத்திரிக்கை முதலாளி பெரிய பணக்காரர் அவரின் மகள் அவரின் மகள் பாட்ரிசியா
அவள் கல்லூரி வழக்கத்தில் சிம்பயானிஸ் விடுதலைப்படை என்ற குழுவினரால்
கடத்தப்படுகின்றாள் பின்பு அவர்களால் ஈர்க்கப்படுகின்றால் இறுதியில்
நாவலின் முடிவே ஏற்படுகின்றது 1974 இல் F.B.I அதிகாரிகள் நாவலாசிரியர்
ரஸ்க்கை விசாரித்து பிழிந்து எடுத்துவிட்டார்கள் ..அனால் ரஸ்க் கூறிய பதில்
நான் எழுதியது முழுக்க முழுக்க கற்பனை ..இதற்கும் எனக்கும் சம்பந்தமே
கிடையாது ........என்பதுதான் ...
பாட்ரிசியா என்ற பெயர் பணக்காரனின் மகள் மனமாற்றம் எல்லாமே .....பொருந்துகிறது ....
இவ்வாறான
சில அமானுஷ்ய விடயங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும் ...ஆனால்
குறைந்தது இரண்டு பேராவது பார்த்திருக்க வேண்டும் ....இல்லாவிட்டால் யாரம்
நம்ப மாட்டார்கள் . ஐம்புலன்களுக்கு உட்பட்டு ஆராய்வது விஞ்ஞானம். புலனையும் கடந்து மெய்யை உணர்வது மெய்ஞானம். புலன்களை அடக்கி ஆள்கின்றபோது ஏராளமான வியத்தகும் சக்திகளை சித்தர்களும் யோகிகளும் அடைகின்றனர். அவர்கள் இதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் சாமானியர்அதிசயிக்கின்றனர். இதை நேருக்கு நேர் பார்க்கும் போது விஞ்ஞானமும் திகைக்கிறது.
வள்ளலாரின் மரணமிலாப் பெரு வாழ்வு
நமது காலத்திற்கு சற்று முன்னர் வாழ்ந்த வள்ளலார் (வடலூர் ராமலிங்க சுவாமிகள்) 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நள்ளிரவில் தனது அறையில் உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டவர் திரும்பி வரவில்லை. அறையின் உள்ளே இருந்த விளக்கை வெளியே கொண்டு வந்து வைத்த அவர், தனது சீடர்களிடம் யாரும் அறையைத் திறக்க வேண்டாம் என்று அருளி விட்டு உள்ளே சென்றார். அவர் ஜோதியாக ஆனாரா, காற்றிலே கலந்தாரா என்பது தெரியாவிட்டாலும், அவர் மரணத்தை வென்ற மாபெரும் ஞானி என்பதை உலகம் உணர்ந்தது.
வள்ளலார் பற்றி அறிய தென் ஆற்காடு கலெக்டர் ஒரு டாக்டருடன் சித்திவளாகம் விரைந்தார். உடல் சிதைந்து நாற்றம் எடுக்கும் என்று நம்பிய டாக்டர் அறைக்குள் நுழைந்தவுடன் திகைத்தார். பச்சைக் கற்பூர மணம் கமழ்ந்தது! அங்கிருந்த சீடர்களிடம் வள்ளலார் பற்றி நன்கு விசாரித்து அறிந்த கலெக்டர், அவரது மாபெரும் ஆன்மீக உயர்வைப் போற்றியதோடு தன் பங்கிற்கு இருபது ரூபாயை அளித்தார்.
1878ல் சவுத் ஆர்காட் கெஜட்டில், அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டவர் திரும்பி காணப்படவில்லை என்று குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுவோர் அவர் கடவுளுடன் ஒன்றாகி விட்டார் என்று நம்புவதையும் குறிப்பிட்டார் ஜே.ஹெச் கார்ஸ்டின். 1906ல் டபிள்யூ. பிரான்ஸிஸ் ஐ.சி.எஸ் சவுத் ஆர்காட் கெஜட்டில் வள்ளலார் மறைந்ததை விளக்கி அதிசயப்படுகிறார்!
பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்
'ஆட்டோபயாகிராபி ஆஃப் எ யோகி' என்ற உலகப் பிரசித்தி பெற்ற நூலை எழுதிய பரமஹம்ஸ யோகானந்தர் (1893-1952) 1952ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி மஹா சமாதி அடைந்தார். அவரது உடல் இருபது நாட்கள் கழித்து மார்ச் 27ம் தேதி வெங்கல மூடியிட்ட பேழையில் வைக்கப்பட்டது. அதுவரை அந்த உடலில் எந்த வித மாற்றமும் இல்லை. லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்த ஃபாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கின் மார்ச்சுவரி டைரக்டர் ஹாரி டி ரோ, “பரமஹம்ஸ யோகானந்தரின் இறந்த உடலில் சிதைவுக்கான எந்த வித அறிகுறிகளும் தோன்றாதது எங்கள் அனுபவத்திலேயே மிகவும் அசாதாரணமான ஒன்றாக விளங்குகிறது. உடல் தோலிலோ அல்லது திசுக்களிலோ எந்த வித மாற்றமும் இல்லை! இது போன்று மாறாமல் இருக்கும் ஒரு உடல் எங்கள் சவக் கண்காணிப்பு வரலாறிலேயே இல்லாத இணையற்ற ஒரு சம்பவம்! நாளுக்கு நாள் எங்கள் வியப்பு கூடிக் கொண்டே போனது” என்று குறிப்பிடுகிறார்!
சூரிய ஒளியை உட்கொண்டு உயிர் வாழும் யோகி
ஹீரா ரதன் மனேக் (1937 செப்டம்பர் 12ம் தேதி பிறந்தவர்) என்ற யோகி சூரிய ஒளியை மட்டும் உண்டு உயிர் வாழ்வதாகக் கூறியதும் நாஸா விஞ்ஞானிகளே வியந்து அவரை தமது ஆராய்ச்சிக்காக அழைத்தனர். சூரிய ஆற்றலை பயன்படுத்துவது எப்படி என்று அறிவதே நாஸா விஞ்ஞானிகளின் நோக்கம்!
விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் கட்டுப்பாடான சோதனைக்கு உட்பட்ட இவர் 1995-96ல் 211 நாட்கள் கொல்கத்தாவில் எந்த வித உணவையும் உட்கொள்ளாமல் இருந்தார். அடுத்து 2000-2001ல் அஹமதாபாத்தில் 411 நாட்கள் 21 மருத்துவர்கள் உள்ளிட்ட நிபுணர் குழுவின் கண்காணிப்பிலும் ஆய்விலும் எதையும் உட்கொள்ளாமல் இருந்தார்! அடுத்து பென்ஸில்வேனியாவில் பிலடெல்பியாவில் தாமஸ் ஜெபர்ஸன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஆன்ட்ரூ நியூபெர்க் மூளையை ஸ்கேன் செய்தவாறு இருக்க, 130 நாட்கள் எதையும் உட்கொள்ளாமல் இருந்தார்.
65 ஆண்டுகள் எதுவும் உட்கொள்ளாத யோகி
பிரஹ்லாத்பாய் ஜானி என்ற 76 வயது ஆகும் யோகி குஜராத்தில் அம்பாஜி ஆலயத்திற்கு அருகே உள்ள குகை ஒன்றில் வசிக்கிறார்! கடந்த 65 ஆண்டுகளில் திரவ பதார்த்தத்தையோ எந்த வித உணவு வகைகளையுமோ தான் தொட்டதே இல்லை; உட்கொண்டதே இல்லை என்கிறார் அவர்! ஆன்மீக தாகம் மீதூற ஏழு வயதில் வீட்டை விட்டுப் புறப்பட்டவர்தான்! 11ம் வயதில் ஒரு தேவதை அவருக்கு அருள் பாலித்தது. அவரது வாயில் மேல் பகுதியிலிருந்து அமிர்தம் சொட்ட ஆரம்பித்தது. அன்றிலிருந்து சிறுநீர் மலம் எதையும் கழிக்கவில்லை! உயிர் காக்கும் அமிர்தம் சொட்ட ஆரம்பித்ததிலிருந்து எனக்கு உணவோ குடிநீரோ தேவை இல்லாமல் போய் விட்டது என்றார் அவர்!
இவரை விஞ்ஞான முறைப்படி ஆராய 2003ம் ஆண்டு நவம்பரில் டாக்டர் சுதிர் வி.ஷா தலைமையில் 21 ஸ்பெஷலிஸ்டுகள் ஒன்று சேர்ந்தனர். பத்து நாட்கள் 24 மணி நேர முழு சோதனை நடத்தப்பட்டது. கார்டியாலஜி, நியூராலஜி, யூராலஜி, கேஸ்ட்ரோ என்டிரோலொஜி, ஆப்தமாலஜி, ரீனல் பங்க்ஷன், பல்மனரி பங்க்ஷன், ஈ என் டி அனாலிஸிஸ், சைக்கியாட்ரி, பொது மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான துறை நிபுணர்கள் குழுவில் இருந்தனர். இந்த அனைத்துத் துறை நிபுணர்களும் தத்தம் துறையில் உள்ள தீவிர சோதனைகளை அவர் மேல் மேற்கொண்டனர். சோதனைகள் அனைத்தும் முடிந்த பின்னர் பிரஹலாதின் சொல்லுக்கு மறுப்பு ஏதும் அவர்களால் தெரிவிக்க இயலவில்லை. அவர்கள் திகைத்துப் போனார்கள். விளக்க முடியாத மர்மமாக அவர் விளங்கினார்.
எப்படி ஒருவரால் தண்ணீர், உணவு இன்றி வாழ முடியும்? சிறுநீர் மலம் கழிக்காமல் இருக்க முடியும்? அவர்களின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லை! சோதனையின் முதல் கட்டமாக அவரை இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் 24 மணி நேரம் வைத்தனர். அடுத்து ஒன்பது நாட்கள் ஒரு கண்ணாடி கதவு கொண்ட டாய்லட் வசதி பூட்டப்பட்ட ஒரு விசேஷமான அறையில் அவர் வைக்கப்பட்டார். அந்த அறையில் ஒரு வீடியோ கேமராவும் பொருத்தப்பட்டது. அத்தோடு விசேஷ பணியாளர்கள் சிலர் 24 மணி நேர டியூட்டியில் தொடர்ந்து அவரைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டனர்! அவர் உணவு அருந்துகிறாரா, தண்ணீர் குடிக்கிறாரா, சிறுநீர், மலம் கழிக்கிறாரா என்று இவை அனைத்தும் கண்காணிக்கப்பட்டன!
ஒரு அல்ட்ரா சவுண்ட் கருவி அவரது சிறுநீரகத்தைப் பரிசோதித்தது. அந்தக் கருவியின் கண்டுபிடிப்பின்படி அவரது சிறுநீரகத்தில் சிறுநீர் சேர்ந்தது. ஆனால் அது சிறுநீரக சுவரில் உறிஞ்சப்பட்டு விட்டது. இது எப்படி நேரிடுகிறது என்பதை குழுவால் விளக்க இயலவில்லை. பத்து நாட்கள் சோதனைக்குப் பின்னர் ஆய்வுக் குழு அவர் திரவ பதார்த்தத்தையோ திட உணவையோ உட்கொள்ளவில்லை என அறிவித்தது. சாதாரணமாக, குடி நீர் இன்றி நான்கு நாட்களுக்கு மேல் ஒருவரால் உயிர் வாழ முடியாது. ஆய்வின் போது அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததையும் குழு உறுதிப்படுத்தியது. மருத்துவமனையின் டெபுடி சூபரின்டெண்டெண்ட் டாக்டர் தினேஷ் தேசாய் தனது அறிக்கையில் தொடர் சோதனைகள் அவர் மீது நிகழ்த்தப்பட்ட போதிலும் அவரது உடல் இயங்கிய விதம் ஒரு சகஜமாகவே இருந்தது என்று உறுதிப்படுத்திக் கூறினார்!
கண்களைக் கட்டிப் படிப்பவர்
காஷ்மீரில் பிறந்த குடா பக்ஸ் தன் கண்களை இறுகக் கட்டிய பின்னர் ஊசியில் நூல் கோர்ப்பார். பார்வையாளரில் ஒருவரை வரவழைத்து அவர் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ஏதேனுமொரு பக்கத்தை எடுக்கச் சொல்லுவார். அதை அப்படியே வரிக்கு வரி படிப்பார். அயல் நாட்டு மொழிகளில் வார்த்தைகளை எழுதச் சொல்லி அதை அப்படியே திருப்பி எழுதுவார். லண்டன் பல்கலைக்கழக அதீத உளவியல் விஞ்ஞானிகள் 1935ல் ஒரு சோதனைக்கு இவரை அழைத்தனர். அதை ஏற்ற இவர் சோதனைக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க தீ மீது நடந்தார். தீயின் மேற்பரப்பு உஷ்ணம் 806 டிகிரி பாரன்ஹீட் என அளக்கப்பட்டது. தீயின் உக்கிரமான உஷ்ணமோ 2552 டிகிரி பாரன்ஹீட். இரும்பையும் உருக்கும் உஷ்ண நிலை! புகைப்படக்காரல் இதனைப் படம் பிடிக்கத் தவறி விட்டதால் மீண்டும் ஒரு முறை குடா பக்ஸை நடக்கச் சொல்லி வேண்டினார். குடா பக்ஸும் நடந்தார். உலகமே வியந்தது!
கண்களை மூடிய பின்னர் பார்வை எப்படிக் கிடைக்கிறது என்ற ரகசியத்தை ஒரு கேள்விக்கு விடை அளிக்கும் போது அவர் வெளிப்படுத்தினார். இரு புருவ மத்தியில் கண்களை வைத்து இருபத்தி நான்கு வருடங்கள் தியானம் செய்தால் அகக் காட்சி வந்து விடுமாம்! புறக் கண்களின் உதவி பிறகு தேவை இல்லையாம்!! 1906ல் பிறந்த இவர் 1981 பிப்ரவரி 5ம் தேதி மறைந்தார்.
மெய்யுணர்வுத் தேட்டப் பாதையில் புலன்களைக் கடந்த பெரும் ஆற்றல் நிச்சயமாக வரும்; அது ஒரு சாதாரண விஷயம் என்று கூறிச் சிரிக்கிறது மெய்ஞானம்! பிரமிக்கிறது விஞ்ஞானம்!!
சிலருக்கு
எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்க முடியும் . சிலர் ஏதாவது விழாக்கள்
பற்றி செய்தி எதிர்பார்க்கும் போது அந்த செய்தி அழைப்பாக வரும் .காணும்
கனவுகள் அனைத்தும் அப்படியே எதிர்காலத்தில் நடக்கும் .
இது Extra sensory perception எனப்படுகிறது . இது கேட்டல் ,சுவைத்தல் , பார்த்தல் ,உணர்தல் போன்ற புலன்களுக்கு அப்பாற்ப்பட்டது. இது உடலோடு சம்மந்தப்பட்டது அல்லாது சிந்தனை ,எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது .
இதில் பல வகைகள் உண்டு
1 . Telipathy - டெலிபதி- வேறு ஒருவருடைய எண்ணங்களை ,மனதை படிக்கும் திறன்
2 . Clairvoyance - வேறு ஒரு இடத்தில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்க கூடிய தன்மை
3 . Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன்
4 . Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்
5 . Mediumship -இறந்த உயிர்களினூடான உரையாடல்...
6 . Psychometry - ஒரு பொருளை தொடுவதன் மூலம் ஒரு நபர் பற்றி , ஒரு இடம் பற்றி அறிந்துகொள்ளல் .
போன்ற பல வகைகள் உண்டு .]
இது ஒரு உதாரணம் ..
இவரால் அந்த நெற்றியின் மீது இருக்கும் வடிவம் எது என உணரமுடியும்.
இதில் விஞ்ஞான ரீதியாகவும்,மனோதத்துவ ரீதியாகவும் தர்க்கங்கள் தொடர்கின்றன .
இதில் டெலிபதி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் . இது ஒருவகை எண்ண அலைவரிசைகள் பரிமாற்றம் போலவே. மின்காந்த அலைகள் போல ஒருவகை அலைகள் இரு எண்ணகளிடையே உரையாடுவதே இது என ஒரு கருத்து வைக்கப்பட்டிருந்தது .
ஒருவகை சக்தி பரிமாற்றம் இரு முனைகளுக்கிடையே இடம்பெறுகிறது என கூறப்பட்டிருந்தது .
இது Extra sensory perception எனப்படுகிறது . இது கேட்டல் ,சுவைத்தல் , பார்த்தல் ,உணர்தல் போன்ற புலன்களுக்கு அப்பாற்ப்பட்டது. இது உடலோடு சம்மந்தப்பட்டது அல்லாது சிந்தனை ,எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது .
இதில் பல வகைகள் உண்டு
1 . Telipathy - டெலிபதி- வேறு ஒருவருடைய எண்ணங்களை ,மனதை படிக்கும் திறன்
2 . Clairvoyance - வேறு ஒரு இடத்தில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்க கூடிய தன்மை
3 . Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன்
4 . Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்
5 . Mediumship -இறந்த உயிர்களினூடான உரையாடல்...
6 . Psychometry - ஒரு பொருளை தொடுவதன் மூலம் ஒரு நபர் பற்றி , ஒரு இடம் பற்றி அறிந்துகொள்ளல் .
போன்ற பல வகைகள் உண்டு .]
இது ஒரு உதாரணம் ..
இவரால் அந்த நெற்றியின் மீது இருக்கும் வடிவம் எது என உணரமுடியும்.
இதில் விஞ்ஞான ரீதியாகவும்,மனோதத்துவ ரீதியாகவும் தர்க்கங்கள் தொடர்கின்றன .
இதில் டெலிபதி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் . இது ஒருவகை எண்ண அலைவரிசைகள் பரிமாற்றம் போலவே. மின்காந்த அலைகள் போல ஒருவகை அலைகள் இரு எண்ணகளிடையே உரையாடுவதே இது என ஒரு கருத்து வைக்கப்பட்டிருந்தது .
ஒருவகை சக்தி பரிமாற்றம் இரு முனைகளுக்கிடையே இடம்பெறுகிறது என கூறப்பட்டிருந்தது .
ஆதிகாலம்
தொட்டே இது நிலவி வந்தாலும் நவீன விஞ்ஞான ,மனோதத்துவ முறையில் இருபதாம்
நூற்றாண்டில் முதற்ப்பகுதியிலேயே டியுக் பல்கலைக்கழக பேராசிரியர்,பிரபல
அமானுஷ்ய தேடல் விஞ்ஞானி( paranormal research ) J.B. Rhineஎன்பவரால் இது 1934 இல் அறிமுகப்படுத்தப்பட்டது .
கூடுதலாக
அனைவரிடமும் காணப்படும் ஒன்று ,அதை நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம் என
சிலரும் , அது ஒரு வித மனோதத்துவ சக்தி கடத்தப்படும் நிலை எனவும் அதை
சிலரால் மட்டுமே செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர் . ஆனால் சிலருக்கு
சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது .
இது
இரு வித சாதாரண ஒளி , எக்ஸ் ரே கதிர்கள் கடத்தப்படுவது போல சாதாரண விடயம்
எனவும் ஆனால் இதை விஞ்ஞான ரீதியில் இன்னும் அறியமுடியவில்லை எனவும் ஒரு
தியரி இருக்கிறது .
ஆனால் இந்த தியரி டெலிபதிக்கு மட்டுமே பொருந்தும் .Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன், Retrocognition
- இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன் களுக்கு பொருந்தாது . காரணம் ஒரு
மூளையில் இருந்து ஒரு செய்தியை அனுப்பும் போது அதனை வாங்குவதற்கும் ஒரு
பெறுனர் இருக்க வேண்டும் .
ஒரு சில உதாரணங்கள் நடைமுறை வாழ்க்கையில் சொல்லலாம் .. "இப்ப தான் நினைச்சன் உன்னிடம் இருந்து அழைப்பு வருகிறது" என நாம் அடிக்கடி அன்றாட வாழ்க்கையில் சொல்வதுண்டு . சிலர் பொய்யாகவும் சொல்வதுண்டு ,ஆனால் பெரும்பாலும் அது உண்மையே .
ஆனால் இந்த செயல்ப்பாடு இருவர் இருக்கும் தூரத்தில் தங்கியிருப்பதில்லை . உதாரணமாக ஒரே
அறையில் இருக்கும் இருவருக்கும் , உலகில் வேறு வேறு மூலையில் இருக்கும்
இருவருக்கும் இடையில் இந்த இன்னொரு சக்தி பரிமாற்றம் ஒரே மாதிரியாக
இருப்பது உணரப்பட்டுள்ளது .
ஆகவே இது எந்த அலைகளாக இருப்பதற்கும் சாத்தியம் இல்லை .மற்றும் உடலில்
அவ்வாறான சக்தியை வெளிவிடக்கூடிய எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .
இத்தகைய
குழப்பமான நிலையில் இன்னொரு தியரியும் முன்வைக்கப்பட்டுள்ளது . அது
எமக்கு தெரியாத சமாந்தர உலகம் பற்றிய தியறியோடு சம்மந்தப்பட்ட விடயம் .
இன்னொரு நேரம் வேறொரு நிகழ்வில் இருக்கும் எம்மால் அந்த உணர்வுகளை மட்டும்
உணர முடியும் .
இவ்வளவு
குழப்பமான உணரமுடியாத பரிசோத்தித்து தெரியாத தியரிகளுக்கு நடுவில் எப்படி
இதை ,இந்த அமானுஷ்யங்களை ஏன் நம்பவேண்டி இருக்கிறது ?எப்படி நம்புவது ?
என்பது பற்றி பார்ப்போம் .
No comments:
Post a Comment