Powered By Blogger

Tuesday, June 23, 2015

அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்!



குடற் புண் (Peptic ulcer) அல்லது வயிற்றுப் புண்இது இரைப்பை உணவுக்குழாய்க்குரிய பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும்.இது பொதுவாக அமிலத்தன்மையுடையது அதனால் மிக அதிக வலியுடையதாக இருக்கிறது. சுமார் 80% சீழ்ப்புண் ஹெலிகோபேக்டர் பைலோரி(Helicobacter pylori) யுடன் தொடர்பு கொண்டிருக்கிறது, இது வயிற்றின் அமிலச் சூழலில் வாழும் ஒரு சுருள் வளைய வடிவிலான நுண்கிருமியாகும், எனினும் இந்த நிலைமைகளின் 40% மட்டுமே மருத்துவரின் கண்காணிப்புக்குச் செல்கின்றன. ஆஸ்பிரின் மற்றும் இதர NSAIDகள் போன்ற மருந்துகளால் கூட சீழ்ப்புண் ஏற்படலாம் அல்லது மோசமடையலாம்.
Helicobacter pylori


வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்- peptic ulcers) இருக்கலாம்.



இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.



குடல் புண் எதனால் ஏற்படுகிறது

மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:

1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.(Gastric ulcers)
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.(Duodenal ulcers)
Duodenal ulcers



Gastric ulcers




குடல் புண்ணின் அறிகுறிகள்: 



  • காரணமின்றிப் பற்களைக் கடித்தல்
  • வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி
  • நெஞ்செரிவு
  • மார்பு என்புப் பகுதிகள் இல்லாதது போல் தோன்றுதல்
  • வயிறு வீங்குதல்
  • பசியின்மை 


காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.

குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:
சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.
இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.
சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.


குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு
சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.
ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. 

குடற்புண் கண்டறிதல் முறைகள்
  • சிறுநீர் உப்பு, மூச்சு பரிசோதனை
  • ஒரு ஈ.ஜீ.டீ.(EGD) உடல் திசு ஆய்வு மாதிரியிலிருந்து நேரடி வளர்மம்
  • விரைவான யூரியேசு பரிசோதனை மூலம் உடல் திசு ஆய்வு மாதிரி செயல்பாட்டில் யூரியேசு|விரைவான யூரியேசு பரிசோதனை மூலம் உடல் திசு ஆய்வு மாதிரி செயல்பாட்டில் யூரியேசியின் நேரடி கண்டறிதல்;
  • இரத்தத்தில் நோய் எதிர்ப்பு நிலைகளின் அளவீடு
  • மல எதிரியாக்கி பரிசோதனை
  • உயிர்த்தசை பரிசோதனைகள் மற்றும் ஒரு ஈ.ஜீ.டீ. உடல் திசு ஆய்வை வண்ணமிடுதல்
இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

 குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:
  • குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
  • மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
  • வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
  • மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
  • பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
  • பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
  • இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. 
  • மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். 
  • யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.
  • எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். 
  • சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது.
  •  வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. 
  • அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
  • குடல் புண் உள்ளவர்கள் பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

.நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.

. நவீன சிகிச்சை மூலம் பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது

.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

சிகிச்சைமுறை


சீழ்ப்புண் போன்ற நோய் அறிகுறி கொண்டிருக்கும் இளம் நோயாளிகள் பெரும்பாலும் EGD மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் அமிலமுறிவுகள் அல்லது H2 எதிரிகளால் சிகிச்சையளிக்கப்படுகின்றனர். பிஸ்மத் தனிமங்கள் உண்மையிலேயே உயிர்ப்பொருள்களைக் குறைக்கலாம் அல்லது அவற்றைச் சுத்தப்படுத்தலாம், இருந்தாலும் சில பிஸ்மத் சப்சாலிசைலேட் பொருட்களின் எச்சரிக்கை லேபில்களில் வயிற்றுப் புண் கொண்டிருக்கும் நபர்கள் இந்தப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நான்ஸ்டீராய்டல் ஆன்டி-இன்ஃப்ளமேடரி (NSAIDs)களை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் ப்ரோஸ்டோகிளாண்டின் அனலாக் (மிசோப்ரோஸ்டோல்) கூட எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுவார்கள், இது NSAID களின் பக்க விளைவுகளாக இருக்கக்கூடிய வயிற்றுப் புண்களைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
எச். பைரோலி நோய்த்தாக்கம் இருக்கும்போது, மிகச் சிறப்பாக செயல்படுத்தக்கூடிய சிகிச்சையாக இருப்பது இரு நோய் எதிர்ப்புகளின் கூட்டு (எ-டு: க்ளாரித்ரோமைசின், அமாக்சிசிலின், டெட்ராசைக்ளின், மெட்ரோனைடேஸோல்) மற்றும் ஒரு ப்ரோடான் பம்ப் இன்ஹிபிடர் (பிபிஐ), சிலநேரங்களில் பிஸ்மத் சேர்மங்களும் உடன் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. சிக்கலான சிகிச்சை-எதிர்ப்பு நிலைமைகளில் மூன்று நோய்எதிர்ப்பான்கள் (அமாக்சிசிலின் + க்ளாரித்ரோமைசின் + மெட்ரோனைடேஸோல்) பிபிஐ-யுடன் சேர்த்தும் மற்றும் சிலநேரங்களில் பிஸ்மத் சேர்மங்களுடன் இணைத்தும் பயன்படுத்தப்படலாம். சிக்கலற்ற நிலைமைகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய முதல் நிலை சிகிச்சையாக இருப்பது அமாக்சிசிலின் + மெட்ரோனைடேஸோல் + பாண்டோப்ராஸோல் (இது ஒரு பிபிஐ). எச். பைலோரி இல்லாதபோது, பெரும்பாலும் நீண்ட கால உயர்ந்த பிபிஐ களின் டோஸ்கள் பயன்படுத்தப்படுகிறது.
எச். பைலாரி யின் சிகிச்சை வழக்கமாக நோய்த்தாக்கம் சுத்தமாக்கல், நோய்அறிகுறிகள் தணிப்பு மற்றும் இறுதியில் சீழ்ப்புண்களின் குணப்படுத்தலுக்கு வழி வகுக்கிறது. நோய்த்தாக்கம் மீண்டும் ஏற்பட்டு மறுசிகிச்சை தேவைப்படலாம். அப்போது அவசியம் ஏற்பட்டால் இதர நோய் எதிர்ப்பு மருந்துகளுடன் குணப்படுத்தலாம். 1990 ஆம் ஆண்டுகளில் பிபிஐகளின் பரந்துவிரிந்த பயன்பாடு காரணமாக சிக்கலற்ற வயிற்றுப் புண்களுக்கான அறுவை சிகிச்சை நடைமுறைகள் ("உயர் தேர்வுடைய வாகோடோமி" போன்றவை) வழக்கற்றுப்போனது.
துளையேற்பட்ட வயிற்றுப் புண் அறுவைசிகிச்சை செய்யவேண்டிய ஒரு அவசரநிலையாக இருக்கிறது, மேலும் அந்த துளைகளைச் சீர்படுத்த அறுவைசிகிச்சை செய்யவேண்டிய அவசியமும் இருக்கிறது. பெரும்பாலான இரத்தம் வெளியேறும் சீழ்ப்புண்களுக்கு ஒரு என்டோஸ்கோபி உடனடியாகத் தேவைப்படுகிறது, இது தீய்ப்பான், ஊசிபோடுதல் அல்லது க்ளிப்பிடுதல் மூலம் வெளியேறும் இரத்தத்தை நிறுத்துகிறது.

இலாபம் கொடுக்கும் பப்பாளி!


கைகொடுக்கும் பப்பாளி!
“எப்பவுமே சித்திரை மாதத்துல இருந்து ஆடி மாதம் வரை எல்லா பழ வகைகளுமே மகசூல் அதிகமாக இருக்கும். இதனால் மார்க்கெட்டுக்கு, வரத்து அதிகமாகி பழங்களுக்கு விலை இருக்காது. அதனால ஆவணி மாசம் பறிப்புக்கு வர்ற மாதிரி கார்த்திகை மாசம் நடவு போடணும். பொதுவா கார்த்திகை மாதம் நடக்கூடாதுனு சொல்லுவாங்க. அப்படி நட்டா, ஆவணி மாசம் காய்ப்புக்கு வர்றப்போ மகசூல் குறைவாத்தான் இருக்கும். ஆனா, நல்ல விலை கிடைக்கும். அதிகமா விளைய வச்சு விலை இல்லாம குப்பையில கொட்டுறதுக்கு பதிலா, குறைவான மகசூல் கிடைச்சாலும், நல்ல விலை கிடைச்சிடும்.
 
ஏக்கருக்கு 70 ஆயிரம் கிலோ!
9-ம் மாதத்திலிருந்து தொடர்ந்து 9 மாதங்களுக்கு வாரம் 3 பறிப்புகள் வீதம் பப்பாளிப் பழங்களைப் பறிக்கலாம். 9 மாதங்களுக்கு 108 பறிப்புகள் வரும். ஒரு பறிப்புக்கு 800 கிலோ கிடைக்கும்.
சராசரியாக 100 பறிப்புகள், ஒரு பறிப்புக்கு 700 கிலோனு வெச்சிக்கிட்டாகூட மொத்தம் 70 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ சராசரியாக 7 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், உழவு, கன்றுகள், நடவுக்கூலி, பறிப்புக்கூலி, சாணம், கோழி எருனு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மீதி, 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்” என்ற சரவணன் நிறைவாக,
“நான் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்லதான் பப்பாளியை விற்பனை செய்றேன். தவிர, தோட்டத்துக்கு வந்து கேட்கிறவங்களுக்கும் விற்பனை செய்றேன். ரசாயனம் இல்லாம விவசாயம் செய்யுறதுனால தனி விலையெல்லாம் யாரும் தர்றதில்லை. ஆனாலும், நஞ்சில்லாத பழத்தை விற்பனை செய்யுறதுல மனசுக்கு சந்தோசம்தான். தனியா ஒரு ஏக்கர்ல பப்பாளி நடவு செய்து இரண்டு மாத கன்றுகளா இருக்கு. அதுல ஊடுபயிரா வெள்ளரி போட்டிருக்கேன். இன்னும் காய்ப்புக்கு வரலை. என்னைப் பொறுத்தவரைக்கும் பப்பாளியை சாகுபடி செய்தா வருமானம் நிச்சயம்’’ என்று சொல்லி  விடைகொடுத்தார்.  
சாகுபடி செய்யும் விதம்!
பப்பாளி சாகுபடி செய்யும்விதம் குறித்து சரவணன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 கன்றுகள்!
“தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை சட்டிக்கலப்பை மூலம் உழுது பத்து நாட்கள் காயவிட்டு, மீண்டும் சட்டிக்கலப்பை மூலம் உழுது, பத்து நாட்கள் காய விடவேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழுது அடுத்த நாள், கன்றுக்குக் கன்று 2 மீட்டர், வரிசைக்கு வரிசை 2 மீட்டர் என்ற இடைவெளியில் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு நாட்கள் காலையும் மாலையும் 2 மணி நேரம் தண்ணீர் விட்டு, மூன்றாவது நாள் மாலை, 15 சென்டி மீட்டர் அளவுக்கு குழி எடுக்கவேண்டும். குழிக்கு ஒரு நாற்று என்ற கணக்கில் நடவு செய்யவேண்டும். மாலைப் பொழுதில் நடுவதால், வெயில் பாதிப்பு இருக்காது. மறுநாள் காலையில் வரும் வெயிலை எதிர்கொள்ளும் தன்மையும் கன்றுக்குக் கிடைத்துவிடும். ஒரு ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் தேவைப்படும். 
நடவில் கவனம் தேவை
வேர்ப்பகுதி தண்டுடன் சேரும் பகுதியை ‘மோதிர வளையம்’ என்பார்கள். இந்த மோதிர வளையம் பகுதிவரைதான் செடி மண்ணுக்குள் இருக்க வேண்டும். வேர்ப்பகுதி மண்ணுக்குள்ளும் தண்டு வெளியேவும் இருக்க வேண்டும். தண்டுப்பகுதி மண்ணுக்குள் இருந்தால், ‘எர்மினியா’ என்ற நோய் தாக்கி தண்டுப்பகுதி அழுகிவிடும். நடவு செய்ததில் இருந்து இரண்டு நாட்கள் வரை தொடர்ந்து செழிம்பாக தண்ணீர் கொடுக்கவேண்டும். பிறகு ஒரு நாள் விட்டு ஒருநாள் பாசனம் செய்தால் போதும்.
45-ம் நாள் கன்றை விட்டு ஓர் அடி தள்ளி 2 அடி அகலம், ஓர் அடி ஆழத்தில் குழி எடுத்து ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ அளவில் மட்கிய சாணத்தை, வைக்க வேண்டும். கடலைப் பிண்ணாக்கு வைத்தால் நூற்புழு வரும். அதனால், கவனம் தேவை. 
200 லிட்டர் தண்ணீரில், 5 கிலோ கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, ஒரு லிட்டர் இ.எம். கரைசலை ஊற்றிவிட்டு ஒரு வாரம் வரை வைத்திருந்து, சொட்டுநீர் மூலமாக மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும். இதை, கன்றுகளை நட்ட இரண்டாவது மாதத்திலிருந்து கொடுக்க வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படும்.
பூப்பூக்கும் நேரத்தில் கோழிஎரு!
90 முதல் 95 நாட்களில் (மூன்று மாதத்தில்) செடிகளில் பூப்பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் வேர்கள் பரவி இருக்கும் என்பதால், சொட்டு நீர்க்குழாயை ஓர் அடி தள்ளி போட்டு, ஒவ்வொரு செடிக்கும் தலா 3 கிலோ கோழிஎரு வைக்க வேண்டும். பிறகு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து கோழிஎரு வைத்து வர வேண்டும்.
காய் பெருக்க மீன்கரைசல்!
கன்று நட்டதிலிருந்து 9 மாதம் கழித்து, முதல் பறிப்பு வரும். 11-ம் மாதத்தில் இருந்து மகசூல் படிப்படியாக அதிகரிக்கும்.
200 லிட்டர் தண்ணீரில், 10 கிலோ மீன்கழிவுடன் ஒரு லிட்டர் இ.எம் கரைசலை ஊற்றி 40 நாட்கள் வைத்திருந்து, இதில் 10 லிட்டர் கரைசலை எடுத்து சொட்டுநீர் மூலம் வாரம் ஒரு முறை கொடுக்க வேண்டும். இதன் மூலம் பூக்கள் அதிகம் பூத்து, காய்களும் பருமனாவதோடு, மகசூலும் கூடும். கன்று நட்ட 15-ம் மாதம் வரை மகசூல் அதிகமாக இருக்கும். பிறகு, குறையத் தொடங்கும். 9-ம் மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரை... வாரம் ஒருமுறை மீன்கழிவு- இ.எம். கரைசலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, கோழிஎருவும் என முறையாகக் கொடுத்து வந்தால், மகசூல் குறையாமல் சீராக இருக்கும்.”
டெங்கு காய்ச்சலை விரட்டும் பப்பாளி இலைச்சாறு!
பப்பாளிப்பழத்தில் வைட்டமின்-ஏ சத்து அதிகமுள்ளது. இது ஒரு நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல், வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்னைகளுக்கு அருமையான மருந்து. பித்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கும். பப்பாளிப் பாலில் செரிமானத்துக்கு உதவும் என்சைமான ‘பப்பாயின்’ உள்ளது. இது புரோட்டீன் உணவைச் செரிக்கவைக்க உதவும். அதிகமான பருப்பு உணவை உண்டபிறகு, இரண்டு பப்பாளித்துண்டுகளைச் சாப்பிட்டால், நன்றாக செரிமானமாகி விடும். பழுக்காத பப்பாளித்துண்டுகள் அல்லது பப்பாளிச்சாற்றை சிறிதளவு குடித்தால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் மலத்தில்   
மாவுப்பூச்சிக்கு தண்ணீர் ஸ்பிரே..!
பப்பாளியை மாவுப்பூச்சிகள் தான் அதிகம் தாக்கும். கன்று நட்ட ஒரு மாதத்தில் இருந்தே கன்றுகளைக் கவனமாக உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு அடியில், இலைக்கு மேல், தண்டுப்பகுதியில், பூக்களில் என வெள்ளை நிறத்தில் பஞ்சு போல மாவுப்பூச்சி இருக்கும். ஒரு பூச்சியைக் கண்ணில் பார்த்தால்கூட, தண்ணீரை கன்று முழுவதும் ஸ்பிரே செய்ய வேண்டும். தண்ணீர் ஸ்பிரே செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில்,10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்பெண்ணெய் மற்றும் சிறிதளவு காதிசோப் ஆகியவற்றைக் கலந்து ஸ்பிரே செய்ய வேண்டும். அடிக்கடி கன்றுகளை உற்றுக் கவனித்தால் மட்டுமே மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த முடியும்.
வேர் அழுகலைத் தடுக்க சுண்ணாம்பு-துத்தநாகக் கரைசல்!
சில கன்றுகளின் வேர்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் தாக்குவதால், கன்றுகள் சரிந்து விடும். இலைகள் பழுப்பு நிறமாகி, கன்று வாடலாகக் காணப்பட்டால், தூர்ப்பகுதியில் லேசாக குழிதோண்டிப் பார்த்தால் வேர் அழுகல் தெரியும். இதைத் தடுக்க 10 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சுண்ணாம்பு, 200 கிராம் மயில்துத்தம் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். மயில்துத்தத்தை நேரடியாகத் தூவினால் பொங்கி, முகத்தில் தெறித்துவிடும். அதனால் ஓரமாகத் தூவி, மெதுவாகக் கலக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மயில்துத்தக் கரைசலைக் கலந்து, ஒரு கன்றுக்கு 100 மில்லி அளவில், தூர்ப்பகுதியைச் சுற்றி ஊற்றினால், வேர் அழுகலைத் தடுக்கலாம்.

Saturday, June 20, 2015

கோள் முதல் கருந்துளை வரை.


2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விழா மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. உயர்தர விருந்துக்குத் தேவையான அனைத்து உணவு வகைகளும் தயார் நிலையில் இருந்தன. ஷாம்பெய்ன் பாட்டில்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. விருந்தை ஏற்பாடு செய்தவர், பதற்றத்துடன் காத்திருந்தார். விருந்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால், விருந்தினர் ஒருவர்கூட வரவில்லை. அழைப்பிதழே கொடுக்காத விருந்துக்கு யார் வருவார்?
விருந்தை அவ்வளவு தடபுடலாக ஏற்பாடு செய்துவிட்டு, அழைப்பிதழ் கொடுக்காமல்விட்டது ஏன்? ஏனென்றால், அந்த விருந்து மனிதர்களுக்கானது அல்ல; எதிர்காலத்தில் வசிப்பவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பூமியில் வாழப்போகும் நம் எதிர்காலச் சந்ததியினர், 'காலப் பயணம்’ (Time Travel)  மூலமாக இறந்த காலத்துக்கு வந்து, இந்த விருந்தில் கலந்துகொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
'காலப் பயணிகளை வரவேற்கிறோம்!’ (Welcome Time Travellers)  என்ற பேனர்கூட வாசலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தை ஏற்பாடு செய்தவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டினுக்குப் பிறகு உலகின் அதிமுக்கிய அறிவுஜீவியாக அறியப்படும் விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங். புரிந்துகொள்ள சற்றுச் சிரமமாகவும், நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகவும் இருக்கிறதா? அதுதான் ஸ்டீபன் ஹாக்கிங்!
இந்தப் பேரண்டத்தின் புரியாத பல ரகசியங்களை, தன் பேரறிவால் மனிதகுலத்துக்குத் திறந்து காட்டிய மாமேதை அவர். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், காலத்தின் இதயத் துடிப்பையும் அளந்து சொல்லும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் குறித்து, நம்மில் பலருக்கும் மேலோட்டமாகத் தெரிந்திருக்கும். தன் உடலின் எந்தப் பாகத்தையும் அவரால் அசைக்க முடியாது. தன் 21-வது வயதில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ‘Amyotrophic Lateral Sclerosis’ (ALS)   எனப்படும் ஒருவித பக்கவாத நோயின் தாக்குதலுக்கு உள்ளானார். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயல் இழக்கத் தொடங்க, 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவர் இறந்துவிடுவார்’ என்றனர் மருத்துவர்கள். ஆனால், மருத்துவ அறிவியலுக்குச் சவால்விட்டு, பிரபஞ்ச அறிவியலின் புதிர்களை தன் 73-வது வயதிலும் அவிழ்த்துக்கொண்டிருக்கிறார் ஹாக்கிங்.
பல ஆண்டுகளாக இவரது உடலில் அசையும் பாகங்கள் இமைகளும் புருவங்களும் மட்டுமே. மற்றபடி பேசவும் எழுதவும் உண்ணவும் உடுக்கவும்... அவருக்கு இன்னொருவரின் உதவி தேவை. அப்படியெனில், எப்படி தன் ஆய்வு முடிவுகளை வெளியிடுகிறார்? அவர் சிந்திப்பதையும் கண்டுபிடிப்பதையும் நம்முடன் பகிர்ந்துகொள்ள, பிரத்யேகமான ஒரு கணினி உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்டீபன் ஹாக்கிங்கின் கண், புருவ அசைவுகளைக்கொண்டு அவர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை ஒலி வடிவமாகவே வெளிக்கொண்டுவரும்.
இப்படி நம்ப முடியாத மனிதராக நம்மிடையே நடமாடும் ஹாக்கிங், 'நவீன அறிவியலின் மாபெரும் கொடை’ என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆனால் அவரோ, 'மற்றவர்களுக்கு நான் தொந்தரவாக இருக்கும் நாள் வந்தால், தற்கொலை செய்துகொள்வேன். அதற்கான உதவி எனக்குத் தேவை’ எனச் சொல்லி அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார்.  பி.பி.சி தொலைக்காட்சிக்கு ஹாக்கிங் அளித்த பேட்டி, விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அதன் முன்னோட்டத்தில்தான் ஹாக்கிங்கின் தற்கொலை எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது.
உலகமே கொண்டாடும் ஓர் அறிவியலாளர் ஏன் தற்கொலையைப் பற்றி சிந்திக்க வேண்டும்? காரணம், எளிமையானது. தன் உடல் சவால்களை வென்று அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடிந்த அவரால், சொந்த வாழ்வின் துன்பங்களை எதிர்கொள்ள முடியவில்லை.
பக்கவாத நோய் இருக்கிறது எனத் தெரிந்தும், கல்லூரிக் காலத்திலேயே ஹாக்கிங்கைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஜேன். மூன்று குழந்தைகளுடன் இவர்களின் மண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், மனைவி ஜேன் இன்னோர் ஆணுடன் தொடர்பில் இருக்கிறார் எனத் தெரியவந்தபோது, அதை ஹாக்கிங்கால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தன் உடல் இயலாமை குறித்த கழிவிரக்கம் அவரை வதைத்தது. மேலும் மேலும் இறுக்கமான நபராக மாறினார்.
1985-ம் ஆண்டு, அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சமயத்தில் மயக்கம் அடைந்து விழுந்தார். 'அவரைக் காப்பாற்ற செய்யவிருக்கும் அறுவைசிகிச்சைக்காக தொண்டையில் நிரந்தரமாக ஒரு துளையிட வேண்டும். அதன் பிறகு ஹாக்கிங்கால் பேசவே முடியாது’ என்றனர் மருத்துவர்கள். அதுவரை சிரமப்பட்டாவது பேசிவந்த ஹாக்கிங்குக்கு, இது இரண்டாவது பெரிய இடி. விரக்தியின் உச்சிக்கே சென்றார். அப்போதுதான் தன் வாழ்வின் முதலாவது தற்கொலை முயற்சியை மேற்கொண்டார்.
கைகளையும் கால்களையும் உடலையும் அசைக்க முடியாத ஒருவரால், எப்படித் தற்கொலை செய்துகொள்ள முடியும்? அவரால் செய்ய முடிந்ததெல்லாம் தன் மூச்சை அடக்கி உயிரைவிட முயற்சிப்பது மட்டுமே. மூச்சை இழுத்துப்பிடித்து அடக்கிக்கொண்டு அப்படியே இருந்தார். ஆனால், அவரது இதயம் அதற்கு இடம்கொடுக்கவில்லை. அவரையும் மீறி உடைத்துக்கொண்டு வெளிவந்தது மூச்சுக்காற்று. தன்னால் சுயமாகத் தற்கொலைகூடச் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், தனிமைத் தீவிலேயே தன்னை இருத்திக்கொண்டார்.
1990-ம் ஆண்டு, மனைவி ஜேன் அவரைவிட்டுப் பிரிய, அப்போது ஹாக்கிங்குக்கு செவிலியராகப் பணிபுரிய வந்திருந்த எலைன் என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் ஹாக்கிங். நீண்ட காலத்துக்குப் பிறகு மன இறுக்கம் தளர்ந்து சற்றே இயல்புநிலைக்குத் திரும்பினார். எலைனுடன்             11 ஆண்டுகள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார் ஹாக்கிங். ஆனால், அந்தச் சந்தோஷ பந்தமும் 2006-ம் ஆண்டு முறிந்தது. அதன் பின்னர் இன்று வரை தனிமையிலேயே தன் வாழ்க்கையைத் தொடரும் ஹாக்கிங், இப்போது மறுபடியும் தற்கொலை பற்றி பேசியிருப்பதுதான் அனைவரையும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது!
'என் இளமைப் பருவத்தில் நீச்சலடித்து மகிழ்ந்ததைப்போல, மறுபடியும் நீந்துவதற்கு மனம் ஏங்குகிறது. என் குழந்தைகள், சிறுவர்களாக இருந்தபோது, அவர்களுடன் இணைந்து விளையாட விரும்பியிருக்கிறேன். ஆனால், என்னை விரும்புவோரிடம்கூட, என் எண்ணங்களை வெளிப்படுத்த இயலாத உடல்நிலையுடன் இருப்பதற்காக வருந்துகிறேன். என்னுடன் பேசுவதற்கு பலரும் அச்சப்படுகின்றனர். அவர்களின் உரையாடல் என்னை மேலும் வருத்திவிடக் கூடாது என ஒதுங்கிச் செல்கின்றனர். அந்த ஒதுக்குதல், என்னை மோசமாகத் துன்புறுத்துகிறது. என்னால் இதற்கு மேல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலை வரும்போது, அடுத்தவருக்குப் பாரமாக இருக்க நேர்ந்தால், அவர்களின் உதவியுடனே தற்கொலை செய்துகொள்ள விரும்புவேன். ஒருவரை, அவரது விருப்பத்துக்கு மாறாக உயிர்வாழ நிர்பந்திப்பது அபத்தம்!’ என்றெல்லாம் புலம்பித் தவிக்கிறார் ஹாக்கிங்.
பால்வீதியில் உள்ள ஒரு நட்சத்திரத்தை ஆராய்வதைப்போல, பெருவெடிப்பின் ரகசியத்தை எழுதுவதைப்போல, பேரண்டத்தின் புதிர்களை அவிழ்ப்பதைப்போல... தன் உடலையும் உயிரையும் புறப்பொருளாக நிறுத்தி ஆய்வுசெய்கிறார் ஹாக்கிங். வாழ்நாள் எல்லாம் மனிதகுலத்துக்கு அதிசயங்களை மட்டுமே பரிசளித்துக்கொண்டிருக்கும் இந்த விஞ்ஞானி, தன் மரணம்குறித்த எண்ணத்தையும் உலகின் அறிவார்ந்த தளத்தின் முன்பு ஆய்வுக்காகக் கிடத்தியிருக்கிறார்!

கோள் முதல் கருந்துளை வரை...
இயற்பியலிலும் வானியலிலும் நம்பவே முடியாத முடிவுகளை முன்னிறுத்தி, பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் ஹாக்கிங். அவற்றில் 'பெரும் வடிவமைப்பு’ (The Grand Design), 'காலத்தின் வரலாற்றுச் சுருக்கம்’  (A Brief History of Time) ஆகிய இரண்டும் முக்கியமானவை. 1988-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'காலத்தின் வரலாற்றுச் சுருக்கம்’ புத்தகம், இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமாக விற்றிருக்கிறது. இங்கிலாந்தில் வெளியாகும் 'சண்டே டைம்ஸ்’ இதழின் சிறந்த புத்தக வரிசையில், தொடர்ச்சியாக 237 வாரங்கள் முதல் இடத்தில் இருந்து சாதனை படைத்த புத்தகம் இது.
 எல்லையில்லா பிரபஞ்சவெளியில் இயங்கிக்கொண்டிருக்கும் கோள்கள், நட்சத்திரங்கள், கேலக்ஸிகள், கருந்துளைகள் அனைத்துமே நான்கு அடிப்படை விசைகளால் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த ஆதிப் பெருவெடிப்பின்போது (Big bang) இந்த நான்கு விசைகளும் ஒன்றாகி, ஒரு புள்ளியில் அமைதியாக ஒடுங்கியிருந்தன என ஐன்ஸ்டீன் நம்பினார். அதன் அடிப்படையில், இந்த நான்கு விசைகளையும் ஒரே கணிதச் சமன்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்றும் அவர் நம்பியிருந்தார். ஆனால், அந்தச் சமன்பாட்டைக் கண்டுபிடிக்கும் முன்னரே இறந்து விட்டார். 'ஜிலீமீஷீக்ஷீஹ் ஷீயீ மீஸ்மீக்ஷீஹ்tலீவீஸீரீ’ எனப்படும் அந்தச் சமன்பாட்டைக் கண்டுபிடிக்க பல விஞ்ஞானிகள் முயன்றார்கள். அதில் முக்கியமானவர் ஸ்டீபன் ஹாக்கிங். அதனாலேயே சமீபத்தில் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படத்துக்கு ‘Theory of everything’  எனப் பெயரிட்டார்கள்.
 கருந்துளை என்றாலே, தன் அருகில் செல்லும் அனைத்தையும் தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்ளும் என்றுதான் அதுவரை பலரும் நம்பியிருந்தார்கள். ஒளிகூட அதன் ஈர்ப்பில் இருந்து தப்ப முடியாது. ஆகவேதான் அது கருமையான நிறத்துடன் காணப்படுகிறது என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் ஹாக்கிங், 'கருந்துளை தன்னருகே செல்லும் அனைத்தையும் உள்ளே இழுக்கும்போது, அவை அணுத்துகள்களாகச் சிதைகின்றன. அதனால் ஏற்படும் பெருவெப்பத்தால் கதிர்வீச்சு உருவாகி, கருந்துளையில் இருந்து வெளிப்படுகிறது’ என வேறுபட்ட கருத்தைச் சொன்னார். ஆரம்பத்தில் பல விஞ்ஞானிகளால் மறுக்கப்பட்டு, பிறகு படிப்படியாக அனைவரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டனர்.

Monday, June 15, 2015

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்


 தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..
பெரிய கோயில் அளவுகோல்...
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்
1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது. !!

Keyboard


10 வருடங்களாக கணினியில் ரைப்செய்பவர்கள் கூட இரண்டு விரல் நுனிகளைக்கொண்டோ அல்லது ஒரு விரல் நுனியினைக்கொண்டோ ரைப்செய்யும் அவலம் இன்றும் உள்ளது. ஆனால் நான்கு மணி நேரங்களில் நிமிடத்துக்கு 40 சொற்கள் என்ற வேகத்தில் எந்த ஒருவராலும் தமிழிலோ ஆங்கிலத்திலோ ரைப் செய்ய முடியும் என்பதே உண்மை.
.
ரைப்பிங் செய்வது என்பது ஒரு இயல்பாக்கல் செயற்பாடு. மூளையுடன் தொடர்பற்றது. அதாவது ரைப் செய்யும்போது எந்த "கீ" எங்கு உள்ளது என்ற சிந்தனையோ அல்லது எந்த "கீ" இற்கு எந்த விரல் என்ற சிந்தையோ எழக்கூடாது. எனவே ரைப்பிங் செய்யும்போது அது தொடர்பாக மூளையின் செயற்பாட்டினை தடைசெய்வதே வேகமாக ரைப்பிங் செய்வதற்கான ஒரே வழி
.
செய்யவேண்டியதெல்லாம் இவ்வளவுதான்.
.
1. படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோன்று ஒவ்வொரு "கீ" இற்கும் குறிப்பிட்ட விரலை மட்டும் பயன்படுத்த வேண்டும். (எக்காரணம்கொண்டும் விரல்களை மாறி பயன்படுத்த கூடாது)
.
2. பயிற்சியின்போது ரைப் செய்யும்போது கணினி திரையை பார்க்க கூடாது (மூளையின் தொடர்பை நிறுத்த)
.
3. பயிற்சியின்போது ரைப் செய்யும்போது கீபோட்டை பார்க்க கூடாது (மூளையின் தொடர்பை நிறுத்த)
.
4. பயிற்சியின்போது ரைப் செய்யும்பொது விடும் தவறுகளை திருத்தக்கூடாது. (மூளையின் தொடர்பை நிறுத்த)
.
5. காலையும் மாலையும் அரை மணிநேரம் வீதம் நான்கு நாட்கள் பயிற்சிசெய்தால் போதும். தமிழோ ஆங்கிலமோ நிமிடத்துக்கு 40 சொற்கள் என்ற வேகத்தில் ரைப் செய்ய முடியும்.
.
குறிப்பு : வேகமாக ரைப் செய்பவர் ஒருவரிடம் "S" அல்லது ஏதாவதொரு எழுத்தை சொல்லி அது எங்கே இருக்கிறது என்று கேட்டு பாருங்கள் அதை சொல்வதற்கு நிறைய நேரம் எடுக்கும். ஆனால் அதற்குள் அவர் 100 எழுத்துக்களை ரைப் செய்துவிடுவார். காரணம் வேகமாக ரைப் செய்பவர்கள் மூளையை பயன்படுத்துவதில்லை. கையில் ஏற்படுத்திக்கொண்ட இயல்பாக்கத்தின் மூலமே ரைப் செய்வார்கள்.
.
ஆங்கிலம் கதைப்பதும் இதேபோன்றுதான். வசன உருவாக்கம் தொடர்பாக மூளையினை பயன்படுத்தி ஒரு சிறிய இலக்கண சிந்தை இருந்தால்கூட ஆங்கிலத்தினை கதைக்க முடியாது. வாயிலே சொல்லப்படும் வசனங்கள் அமைப்பு ரீதியாக இயல்பாக்கப்படுவதன் மூலமாக மட்டுமே கதைக்க முடியும்.

இரும்பு மனிதர் மிட்டல்!

 உ லகமே கவனிக்கும் ‘இரும்பு மனிதர்’ என்ற பெயர் வாங்கி இருக்கிறார் இந்தியரான லட்சுமி மிட்டல். உலகின் மிகப்பெரிய இரும்பு ஆலை, ‘ஆர்ஸ்லர்-மிட்டல்’ உருவாகக் காரணமாகி இருப்பதால்தான் இத்தனை கவனிப்பு!
இதைச் சாதிப்பதில் அவர் சந்தித்த சவால்கள், இந்தப் போராட்டத்தின்போது இந்தியர் என்பதால் அவர்மீதும், அதனால் பொதுவாக இந்தியர்கள் மீதும் வீசப்பட்ட துவேஷ வார்த்தைகள்... இதையெல்லாம் தாண்டி, எடுத்த காரியத்தில் ஜெயித்து, இந்தியர்களின் கவுரவம் காத்திருக்கிறார் கோடீஸ்வரர் மிட்டல்.
மிட்டலின் வாழ்க்கை ஆரம்பமே இப்படியான ஒரு திருப்பத்தில்தான் தொடங்கியது. 1970-களின் மத்தியில் இவருடைய தந்தை இந்தோனேஷியாவில் நடத்திவந்த ஓர் இரும்பு ஆலையை மூடச் சொல்லித்தான் அவரை அங்கே அனுப்பினார். தந்தை இட்ட கட்டளையை நிறைவேற்ற அங்கே சென்ற மிட்டல், அந்த கம்பெனியை லாபப் பாதைக்கு திருப்பினார். இது ஏதோ அதிர்ஷ்டத் தால் நடந்ததல்ல.
அதன்பிறகு மிட்டல் தொடர்ந்து, அடுத்த அடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார். நாளன்றுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்களை விழுங்கிக்கொண்டிருந்த, ‘ட்ரினிடாட் அண்ட் டுபாகோ’ என்ற தீவில் இருந்த ‘இஸ்காட்’ என்ற இரும்பு நிறுவனம், இவர் கண்பட்டு சாப விமோசனம் அடைந்தது. அதை விலைக்கு வாங்கி, லாபப் பாதைக்குத் திரும்பினார் மிட்டல்.
குறுகியகாலத்தில் வெற்றி மேல் வெற்றி குவிக்கத் தொடங்கிய மிட்டலை, எல்லாரும் கவனிக்கத் தொடங்க... 1992-ல் மெக்ஸிகோ அரசு இவரை அழைத்து, அவர்களது நாட்டின் நலிந்த இரும்பு ஆலைகளை ஒப்படைத்தது. அது ஒன்றும் அவ்வளவு லேசுபட்ட காரியமாக இல்லை. ஆனாலும் சமாளித்தார் மிட்டல்.
இதற்கிடையில் மிட்டலின் குடும்பத்துக்குள் குடைச்சல். அவருடைய சகோதரர், தந்தை என ஓர் அணியில் நின்று இவரது வேகத்துக்கு பிரேக் போட, அவர்களுக்கு ‘பை’ சொல்லிவிட்டு, தனது பயணத்தைத் தனியாகத் தொடங்கிவிட்டார்.
மெள்ள மெள்ள ஐரோப்பியச் சந்தைக்கும் சிறகு விரித்தார் மிட்டல். 2000-மாவது ஆண்டுவாக்கில் ‘நஷ்டத்தில் இயங்கும் இரும்பு ஆலைகளுக்கு ஒரே வைத்தியர் மிட்டல்தான்’ என்றானது. அந்தந்த அரசுகளிடமிருந்து அதை மிகக்குறைந்த விலைக்கு வாங்கிய மிட்டல், அவற்றில் நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்தத் தயங்கவில்லை. அதன் பலன் அவர் காட்டில் பணமழை கொட்டியது. இதனால் தொடர்வேட்டை நடத்துவதும் இவருக்கு எளிதாக இருந்தது.
இதற்கிடையில் ‘இஸ்காட் இன்டர்நேஷனல் நிறுவன’ பங்குகள் நியூயார்க், ஆம்ஸ்டர்டாம் போன்ற பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட, மிட்டல் முத்திரை இரும்பு ஆலைக்கான அடையாளமாக உருவெடுக்கத் தொடங்கியது. எல்லா இரும்பு ஆலைகளையும் ‘மிட்டல் ஸ்டீல்’ என்ற ஒரே பெயரில் ஒருங்கு இணைத்தார்.
மிட்டலின் சாம்ராஜ்யம் இன்றைக்கு ‘ஆர்ஸ்லர்- மிட்டல்’ என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமாக மாறிவிட்டாலும் இதன் ஆரம்ப கட்டங்கள் படு சுவாரஸ்யமான டிராமாக்கள் கொண்டது. 2005 அக்டோபரில் உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று விற்பனைக்கு வந்தது. அப்போது உலகின் மிகப்பெரிய நிறுவனம் என்ற அந்தஸ்துடன் இதை தனதாக்கிக்கொள்ள மிட்டல் முயன்றார். இரண்டாவது இடத்தில் இருந்த ஆர்ஸ்லர் நிறுவனமும் கோதாவில் இறங்கியது.
தமிழ் சினிமாக்களில் ஹீரோவும் வில்லனும் ஏலத்தில் மோதும் கதை போல அது முடிந்துபோனது. சின்னதிரையில் வெளிப்படையாக நடந்த அந்த ஏலத்தில் - 2.4 பில்லியன் மதிப்புகொண்டது என்று கருதப்பட்ட அந்த ஆலைக்கு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்தார் மிட்டல்.

அப்போது மிட்டல் ஸ்டீலின் முதன்மை நிதி அதிகாரியாக இருந்த மிட்டலின் மகன் ஆதித்யா தந்தைக்கு ஓர் ஆலோசனை சொன்னாராம். அதாவது, இவ்வளவு பெரிய விலை கொடுக்க வைத்த ஆர்ஸ்லர் ஸ்டீலை இனியும் சும்மாவே வெளியில் விட்டு வைத்தால் அடுத்தடுத்த முயற்சிகளின்போது இது தீராத தலைவலியைத் தரும் என்பதுதான் அது. இந்த மந்திராலோசனைக்குப் பிறகு, சம்பவம் நடந்த 3 மாதங்களில் அதாவது 2006 ஜனவரியிலேயே மிட்டல் ஸ்டீல் தன் அஸ்திரத்தை வீசியது.
அதன்படி ஆர்ஸ்லர் பங்கு ஒன்றுக்கு மிட்டல் ஸ்டீல் 28.21 யூரோக்களை வழங்கி பெருமளவு பங்குகளை வாங்கிக் குவிக்கத் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த அறிவிப்பால் ஆர்ஸ்லர் நிர்வாகம் கொஞ்சம் ஆடித்தான் போனது. அதன் சி.இ.ஓ பொறுப்பில் இருந்த கைடோல் அப்போது கொஞ்சம் அதிகமாகவே ரியாக்ட் செய்தார். மிட்டலை அப்போது கடும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்து, இன துவேஷ வார்த்தைகளையும் சரளமாக அள்ளி வீசினார்.
இது சர்வதேச அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியதோடு, இந்திய அரசு முதல், பரவலாக இந்தியர்களிடையும், மற்ற நடுநிலையாளர்களிடையேயும் மிட்டலுக்கு மிகப்பெரிய ஆதரவைத் திரட்டிக் கொடுத்தது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்திருந்தபோது தனிப்பட்ட முறையில் மிட்டல் விவகாரம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. இப்படியாக, உலகின் மூன்றாவது பணக்காரரான மிட்டல் இந்தியர்களின் மனதில் ஒரு ஒடுக்கப்படும் வர்க்கப் பிரதிநிதியாக இடம் பிடித்தார்.

இன்னொருபக்கம், மிட்டல் தனது வழக்கமான காய்களை நகர்த்தத் தவறவில்லை. அதாவது, இதற்கு முன் அவர் பல இரும்பு ஆலைகளை வாங்கி, லாபப் பாதைக்கு திருப்பியபோதெல்லாம் அதில் ஆட்குறைப்பு உட்பட்ட பல சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதுபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் இருக்காது என இப்போது ஆர்ஸ்லர் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி தந்தார். ஆனால், ஆர்ஸ்லர் நிர்வாகம் சரிப்பட்டுவரவில்லை. ஒரு கட்டத்தில் மீண்டும் இது கௌரவப் பிரச்னையாக உருவெடுக்க, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என கைடோலுடனான மோதலைத் துவங்கினார். இதனால், ‘ஏற்கெனவே சொன்ன விலையை அதிகரித்து ஒரு பங்குக்கு 35.74 யூரோக்கள் வழங்கப்படும்’ என்றார்.
எதிரணி தளபதி கைடோல், மிட்டலின் இந்த திட்டத்தை எப்படியும் உடைத்து விடவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். மிட்டல் ஸ்டீலுக்கு இன்னும் போட்டியை அதிகரிக்க முயன்றார். ரஷ்யாவின் செவர்ஸ்டால் என்ற நிறுவனத்தை அவர் மிட்டலுக்கு எதிராக களத்துக்கு அழைத்துவந்தார். இந்த ரஷ்ய நிறுவனம் தன் பங்குக்கு ஒரு படி மேலேயே போய் ஆர்ஸ்லரை வாங்கிக்கொள்ளும் ஒப்பந்தமே போட்டது. ஒருவேளை அந்த ஒப்பந்தம் நடைமுறைபடுத்தப்படாமல் போனால் ஆர்ஸ்லர் இதற்கு 162 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று முடிவானது. ஆனால், ஆர்ஸ்லர் பங்குதாரர்கள் பலரும் செவர் ஸ்டாலுடனான இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பெருமளவு பங்குதாரர்கள் மிட்டல் ஸ்டீலுடன் இணைவதை ஆதரித்தனர்.
இப்படி பல கட்டங்களைத் தாண்டி ஜூலை 25-ல் நடைபெற்ற ஆர்ஸ்லர் நிர்வாகக்குழு கூட்டத்தில் மிட்டல் ஸ்டீல் தர முன்வந்த ஒரு பங்குக்கு 40.37 யூரோக்கள் என்ற விலைக்கு பங்குகளை மிட்டலுக்கு விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் லட்சுமி மிட்டல் இன்று உலகின் இரும்பு மனிதராக உருவாகி நிற்கிறார். உலக இரும்பு உற்பத்தியில் இனி 10 சதவிகிதம் ஒரே ஒரு இந்தியர் கையில் என்ற நிலை வந்துள்ளது.
உலகம் கவனிக்கும் பிஸினஸ் புலியாக உருவெடுத்தாலும், இங்கிலாந்து நாட்டில் வாழ்பவர் என்று சொல்லப்பட்டாலும், மிட்டல் இன்னும் தனது இந்திய பாஸ்போர்டை விட்டுத் தராதவர். ஏற்கெனவே இந்தியாவில் ஓர் இரும்பு ஆலை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்ட இவர், அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய இரும்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.

பிஸினஸில் ஜெயிக்க முக்கியத் தேவை போராட்ட குணம் என்பதை இன்னும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மிட்டல்.