Powered By Blogger

Monday, April 27, 2015

நிலநடுக்கம்

நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள் நகர்வதனால் இடம் பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்க மானியினால் (செசிஸ்மோமீட்டர்) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது.

3 ரிக்டருக்கும் குறைவான நில நடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதே வேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் சேதத்தை ஏற்படுத்தும். பூமியின் மேற்பரப்பு (லித்தோஸ்பியர்) பெரும் பாளங்களாக அமைந்துள்ளன. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலும் உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம். இந்த பிளேட்டுகள் சுமார் 80 கி.மீட்டர் வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதன் அடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.

இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீட்டர் முதல் சுமார் 13 செ.மீட்டர் வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை. ஒரு நிலநடுக்கம் நிலச்சரிவுகளையும் சில சமயம் எரிமலை செயல்பாட்டையும் அதிகரிக்க செய்யும். ஒரு நிலநடுக்கத்தின் அளவுக்கு வரையறை எதுவுமில்லை என்றாலும் வரலாற்றில் பதிவான மிக பெரிய நிலநடுக்கங்கள் 9.0 ரிக்டருக்கும் கூடுதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவன ஆகும். இத்தகைய நிலநடுக்கமானது அண்மையில் 2011ம் ஆண்டு சென்டாய், ஜப்பானில் நிகழ்ந்தது. பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களில் ஜப்பானில் பதிவான வலுவான நிலநடுக்கம் இதுவாகும். ஆழமற்ற நிலநடுக்கங்களே அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை ஆகும்.

ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலும் இரண்டும் தனித்தனி பிளேட்டுகளில் அமைந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பகுதி, ஆசிய பிளேட்டில் இல்லாமல் தனி பிளேட்டாக அமைந்துள்ளது. இதனாலேயே இது இந்தியத் துணைக் கண்டம் என்றழைக்கப்படுகிறது.

மேலும் இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய பிளேட்டை விட இந்திய பிளேட் வேகமாக நகர்வதால், இந்திய பிளேட் ஆசிய பிளேட்டுடன் மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே இமயமலைப் பிரதேசம். இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இதுதான். இரு பிளேட்களின் அழுத்தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது. பல கோடி வருடங்களுக்கு முன்பு ஆசியாவும், ஐரோப்பாவும் இணைந்து இருந்தது. இது யூரேசியா என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பதால்தான் ஆசியாவும் ஐரோப்பாவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

நிலநடுக்க வகைகள்

நிலநடுக்கம் மூன்று வகையான புவித்தட்டு அசைவுகளால் ஏற்படும். சாதாரண முறை, மேற்தள்ளல் முறை மற்றும் சமாந்தர அசைவு என்பனவே அவையாகும். சாதாரண மற்றும் மேற்தள்ளல் முறைகளில் ஒரு புவித்தட்டு மேல் நோக்கியும் மற்றவை கீழ்நோக்கியும் அசையும். சமாந்தர அசைவில் இரண்டு புவித்தட்டுக்கள் சமாந்தரமாக உராய்வுடன் செல்லும். அனைத்து புவித்தட்டு அசைவுகளும் புவியின் மேலோட்டுக்ளுக்குக் கீழுள்ள உருகிய பாறைக் குழம்பின் அசைவுகளாலேயாகும். புதிதாக புவி மேலோடு உருவாகும் இடங்களான புவித்தட்டு விலகற் பிரதேசங்களில் சாதாரண முறை அசைவு இடம்பெறும். இம்முறையில் ஏற்படும் நிலநடுக்கம் பொதுவாக 7 ரிக்டரைத் தாண்டாது. மேலெழும்பல் அசைவு முறையால் ஏற்படும் நிலநடுக்கங்களே அதிக ரிக்டர் அளவோடு அதிக அழிவையும் ஏற்படுத்துவனவாகும். புவித்தட்டு அசைவுகளைத் தவிர பாறைகளின் அசைவுகளால் சிற்சிறு நிலநடுக்கங்கள் ஏற்படும்.

ஒவ்வொரு வருடமும் 5,00,000 நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன. இவற்றில் 1,00,000 நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன. புவியின் அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. எனினும் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. உலகின் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பூகம்பங்கள் பசிபிக் சமுத்திரத்தை அண்டிய பகுதிகளிலேயே உருவாகின்றன. நிலநடுக்கத்தின் வீரியத்தை நிலநடுக்கப் பதிவுக் கருவி மூலம் அளவிடலாம். இதில் ரிக்டர் அளவீடு பயன்படும். 2010ல் ஏற்பட்ட ஹெய்ட்டி பூகம்பத்தால் அழிவடைந்த கட்டடங்கள். இதுவே நிலநடுக்கத்தின் பிரதான விளைவாகும். இதனால் கட்டடங்களும் ஏனைய பல செயற்கையான அமைப்புகளும் அழிவுக்குள்ளாகும். இதன் தாக்கமானது நிலநடுக்கத்தின் அளவு, மையத்திலிருந்துள்ள தூரம் மற்றும் பிரதேசத்தின் புவியியல் தோற்றப்பாடு போன்ற காரணிகளால் வேறுபடக்கூடியது.

நிலநடுக்கத்துடன் கூடிய கடும் புயல், எரிமலை வெடிப்பு, சுனாமி, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களால் நிலம் மற்றும் பனிப்பாறைகளின் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதால் மண்சரிவோ குளிர் காலநிலையுடைய இடங்களில் பனிச்சரிவோ ஏற்படலாம். நிலநடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் பெரிய தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. 1906ஆண்டில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அதிகமான இறப்புகளுக்கு தீயே காரணமாகும்.

ஆழிப்பேரலை


நிலநடுக்கத்தின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே சுனாமியாகும். பொதுவாக 7.5 ரிக்டர் அளவுக்கு மேற்பட்ட நிலநடுக்கங்களே சுனாமியை ஏற்படுத்தும். உதாரணமாக 2004ல் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை உருவாக்கினதாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது.

நிலநடுக்கத்தின் அளவும் எண்ணிக்கையும்


சிறு நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மற்றும் அலாஸ்கா, மெக்சிக்கோ, குவாத்தமாலா, சிலி, பெரு, இந்தோனேசியா, ஈரான், பாகிஸ்தான், போர்ச்சுக்கல்லின் சில பகுதிகள், துருக்கி, நியூசிலாந்து, கிரேக்கம், இத்தாலி, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் கிட்டத்தட்ட தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் நிலநடுக்கங்கள் நியூயார்க் நகரம், லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா என உலகில் எங்கும் ஏற்படலாம்.

90 சதவிகிதம் முதல் 81 சதவிகிதம் வரையான பெரிய நிலநடுக்கங்கள் அடிக்கடி பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள எரிமலை வளையம் என்ற பகுதியில் அமைந்துள்ளன. இமய மலையின் அடிவாரத்திலும் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலநடுக்க பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மெக்சிகோ நகரம், தோக்கியோ மற்றும் தெஹ்ரான் போன்ற பெரு நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியால், ஒரே நிலநடுக்கத்தில் 3 மில்லியன் மக்கள் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளி பதிவாகியது. இது அந்த நாட்டையே புரட்டிப்போட்டது. இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட அதிக சாத்தியக்கூறுகள் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி, கோடிக்கணக்கில் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நில அதிர்வால் சாலைகள், வீடுகள், கோயில்களை சிதைத்து இயற்கை கோர தாண்டவம் ஆடியுள்ளது.


இது குறித்து இங்கிலாந்தின் ஓபன் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியர் டேவிட் ரோத்ரி கூறுகையில், "இமயமலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பே, பல விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த அளவிற்கு சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்படுவதற்கு மத்திய ஆசியாவில் உள்ள இந்திய-யுரேசிய தட்டுகள் (டெக்டானிக் பிளேட்) ஒன்றோடொன்று மோதுவதே காரணமாகும். நேபாளத்தில் உள்ள செயல்திறன் வாய்ந்த தட்டுகளில் நிலஅதிர்வு ஏற்படுவதற்கு வரலாற்று ரீதியான பல ஆதாரங்கள் இருக்கின்றன. அதிலும், ஆண்டுக்கு 45 செ.மீட்டர் அளவுக்கு பூமியின் இரு அடுக்குகள் மனிதர்கள் உணரமுடியா நிலையில் இப்பகுதியில் நகர்கின்றன.

எவரெஸ்ட் சிகரத்தில் இருக்கும் சிறிய குன்றுகளில் நிலஅதிர்வுக்கு இன்னும் அதிக வாய்ப்புகளும், அவ்வாறு நில அதிர்வு ஏற்படும் போது, கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. இந்திய தட்டுகளில் இமயமலைப்பகுதி தட்டுகள் மிகவும் செயல்திறன் உடையவை. அதிலும் 2 அல்லது 3க்கும் மேற்பட்ட செயல்திறன் வாய்ந்த அடுக்குகள் உள்ளன. இந்த அடுக்குகள் நகரும் போது, இதுபோல கடுமையாக நில அதிர்வுகள் ஏற்படும்.

மேலும், இமயமலைப்பகுதியில் வெளிஉலகம் உணரமுடியா அளவிற்கு அவ்வப்போது, பூமிக்குள்ளே சிறுசிறு நிலஅதிர்வுகள் ஏற்படும். அதில் ஏற்படும் சக்திகள் ஒன்றாக திரட்டப்பட்டு, இதுபோன்ற நேரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக ஏற்படக்கூடும். இதற்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் கணிப்பின்படி, ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளி வரை ஏற்படவாய்ப்பு இருந்துள்ளது. இது போன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் முதலில் உயிர்சேதம் குறைவாக இருப்பதாக தெரியும், ஆனால், படிப்படியாக உயரும்" என்றார்.

இமயமலைப்பகுதியில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளில், அதிக அளவு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்

இதற்கு முன் நடந்த விபத்துக்களில் சில...

கடந்த 1905ல் ஏற்பட்ட கங்கரா நிலஅதிர்வு, ரிக்டர் அளவு கோலில் 7.5 பதிவானது. 1934ல் பீகாரில் ஏற்பட்ட நில அதிர்வு 8.1 ரிக்டர் அளவு பதிவானது. 2005ல் காஷ்மீர் நில அதிர்வு. இதில் 7.6 ரிக்டர் அளவு பதிவானது. இதில் கடைசியாக நிகழ்ந்த இரு நிலஅதிர்வுகளால் ஒரு லட்சம் மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கில் மக்கள் வீடுகள், உடமைகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிமையை இனிமையாக்கலாம்!


னிமை... எந்தத் துறையைச் சேர்ந்தவரானாலும் பாரபட்சம் இன்றி, அனைவரையும் கதிகலங்க வைக்கும் ஒரு உணர்வு. தனிமையிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளவே உலக மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதாக பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்கு முந்தைய தலைமுறையினர் இதே காரணத்துக்காகத்தான் தொலைக்காட்சிகளுக்கு அதிக நேரம் செலவழித்தார்கள்.

"தனிமை நம்மை அரைப் பைத்தியமாக்குகிறது. அதிலிருந்து  தப்பிக்க நாம் ஒரு துணையை நாடுகிறோம். அவர்களோ நம்மை முழு பைத்தியமாக ஆக்கிவிடுகிறார்கள்" என்கிறார் வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வரும் ஒரு பிரபல எழுத்தாளர்.
"தனிமை ஒரு நோய் கிடையாது. தனிமையில் இருந்து தப்பிக்க ஆலோசனைகளே போதுமானது. சிகிச்சைகள் தேவையில்லை ” என்கிறார் மனநல மருத்துவர் திருநாவுக்கரசர்.

தனியாக இருப்பதற்கும், தனிமையில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சிலர் தங்களைச் சுற்றி நிறைய மக்கள் இருந்தும் தாங்கள் தனிமையாக இருப்பதாகவே உணர்வார்கள். இனி பலரின் தனிமைக்கான  காரணங்களைப் பார்ப்போம்.

தனிமையாக உணர காரணங்கள்

தோற்றம்:

ஒரு நபரின் தோற்றமானது, மற்றவர்களின் தோற்றத்துடன் ஒப்பிடும்போது வேறுபட்டால், ' நான் மற்றவர் கள் போல் இல்லை, என்னிடம் இந்த குறையிருக்கிறது' என்ற உணர்வும், எதிர்மறையான எண்ணங்களுமே அவரை தனிமைக்குள் தள்ளிவிடும். மற்றவர்களோடு இயல்பாக பழக விடாது. இந்தப் பிரச்னை உள்ளவர் களிடம் சுற்றத்தார் சகஜமாக பேசி, பழகினால் அந்த உணர்வு அகன்றுவிடும். அல்லது அந்த நபர் ஒரு மன நல மருத்துவரை அணுகி தனது குறைகளைத் தெரிவித்து ஆலோசனைகளைப் பெறலாம். தோற்றத்தால் ஏற்படும் தனிமை உணர்வைக் குணப்படுத்த, சில நேர ஆலோசனைகளே போதுமானது.

அனுபவங்கள்:

மோசமான அனுபவங்களும் தனிமை உணர்வை ஏற்படுத்தி விடக்கூடும். அனுபவங்கள் தந்த அச்சம், நினை வில் நிற்கும் துரோகங்கள், அவமானங்கள், நிறைவேறாத எதிர்பார்ப்புகள் அவர்களைத் தனிமையாக இருக்க வைக்கும். பிறரிடம் சொல்லும் ரகசியம் காக்கப்படாமலே போகலாம், நட்பாகி துரோகம் செய்த அனுபவம் மீண்டும் கிடைக்கலாம் என்ற  எண்ணங்களே அவர்களை தனிமைக்கு கடத்தும். இந்த பழைய சோகமான அனுபவங்களை மறக்கடிக்கக்கூடிய அளவுக்கு நல்ல அனுபவங்கள் ஏற்பட்டால் இந்த பிரச்னைக்கு  தீர்வு கிடைத்து விடும்.
வயது:

தனிமைக்கு மிக முக்கிய காரணியாக இருப்பது வயது. நம் நாட்டில் 45 சதவிகிதத்துக்கு மேலான முதியவர்கள் தனிமையில் இருப்பதுபோல் உணர்வதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்கள், கேட்கும் திறன் பாதிக்கபட்டவர்கள், கண் பார்வை இழந்தவர்களே இதில் அதிகம். கான்பூரில் உள்ள முதியோர் இல்லங்களில், எத்தனை சதவீத முதியவர்கள் தனிமையில் அவதிபடுகிறார்கள் என்று சமீபத்தில் சர்வே நடத்தபட்டது.

அந்த சர்வேயில் ஒரு முதியோர் இல்லத்தை தவிர மற்ற முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியவர்கள், தாங்கள் தனிமையிலே  இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அந்தக் குறிப்பிட்ட முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களிடம் இது பற்றி கேட்டபோது 'நாங்கள் நொடி பொழுதும் சும்மா இருப்பதில்லை. தினமும் ஏதேனும் சமூக பிரச்னையில் தலையிட்டு அதற்கு தீர்வு காண முயற்சிக்கிறோம்.

ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டு கொண்டே இருக்கிறோம். அதனால் எங்களுக்கு தனிமை என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று பதிலளித்து இருக்கிறார்கள். வயோதிகத்தில் வரும் தனிமையை போக்க, எப்பவும் நம்மை பிசியாக வைத்திருப்பது நல்லது.
மரபியல்:

சில நோய்களைப் போல தனிமையும் மரபு சார்ந்ததே. ஆனால், அது முழுவதுமாக அல்ல, பாதி மரபு சார்ந் தது என்கிறது ஆராய்ச்சி. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இரட்டையர்களை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு அவர்களின் மனநிலையை ஆராய்ந்தார்கள். அதில், ஒருவர் தான் வெறுமையாகவும், தனிமையாகவும் உணர்கிறேன் என்று சொன்னால் அடுத்தவரும் அதே நேரத்தில் வெறுமையாகவும், தனிமையாகவும் உணர்வதாக தெரிவித்து இருக்கிறார். இது நூற்றுக்கு 48 சதவிகித நேரங்களில் சரியாக இருந்துள்ளது. 

இதைதான் நம்மூரில் 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்பார்கள். தனிமை, மரபு சார்ந்து ஏற்பட ஐம்பது சதவீத வாய்ப்பு இருப்பதாகவே மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள ஐம்பது சதவிகிதம் சமூகம், சூழலைப் பொறுத்தது.

சமூகம், சூழல்

சொந்த ஊரை விட்டு வெளி இடங்களுக்கு கல்வி நிமித்தமாகவோ, வேலை நிமித்தமாகவோ பலர் இடம் மாறுகிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் புது இடம் தனிமை உணர்வை ஏற்படுத்தும். அங்குள்ள கலாச்சாரத்துக்கு ஏற்றார்போல் மாறுவதற்கு, எல்லாருக்குமே கொஞ்சம் காலம் பிடிக்கலாம். பேசுவதற்கு கூட மொழி ஒரு பிரச்னையாக இருக்கும். இந்த உலகத்தில் இருந்து பிரித்து வைக்கப்பட்ட பொருளாகவே தங்களை நினைத்து கொள்வார்கள். காலப்போக்கில் இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும்.
திருமணம்:

திருமணமாகாதவர்கள், திருமணமாகி பிரிந்தவர்கள், காதலில் தோல்வி அடைந்தவர்கள் அதிகம் தனிமையை உணர்பவர்களாக இருப்பார்கள். குழந்தைப் பருவத்தில் தாய், தந்தை. பதின் பருவத்தில் நண்பர்கள். பிறகு காதலியோ, மனைவியோ. திருமணத்துக்கு பிறகு குழந்தைகள், அதன்பிறகு பேரப் பிள்ளைகள் என  ஒவ்வொரு வயதிலும் மனிதனுக்கு ஒரு உறவு தேவைப்படுகிறது.

இந்த உறவுகள் அந்தந்த காலகட்டத்தில் எதிர்பார்ப்பது போல் இல்லாமல் போனால், மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி சம்பந்தப்பட்டவரை யாருடனும் சகஜமாக பழகவிடாதபடி செய்துவிடும். அவர்கள் எப்போதும் கப்பல் கவிழ்ந்துவிட்டது போன்ற மனநிலையுடன் இருப்பார்கள்.  இந்த உலகின் மீதான வெறுப்பு உணர்வு தொற்றிக் கொள்ளும். அந்த வெற்றிடத்தை நிரப்ப குறிப்பிட்ட அந்த உறவோ அல்லது வேறு ஒரு உறவு கிடைத்துவிட்டால் இதிலிருந்து மீளலாம்.

தனிமையாக உணர்வது,  உறவை இன்னும் இணைக்கமாக வைத்து கொள்ள உதவும் சிக்னலே. அது பெரிய பிரச்னையே இல்லை.  வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல் என்றாவது உங்கள் மனதில் இருக்கும் வெற்றிடத்தை யாரேனும் நிரப்புவார்கள். அதுவரை, நீங்கள் பிறர் அன்பு செலுத்தி கொண்டே இருங்கள்.  தனிமை வெறுமை அல்ல... இனிமை என்பதை உணர்வீர்கள்.  
    
    
தனிமை அறிகுறிகள்:
    
* வாட்டும் தனிமை

* காரணமே இல்லாமல் சோகமாகவே இருப்பது.

* ஒருவிஷயத்தை யாரிடமாவது பகிர வேண்டும் என்று நினைத்து, கடைசியில் பகிர ஆள் இல்லாமல் அந்த விஷயத்தை  நிராகரிப்பது.

* என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை என வருத்தப்படுவது.

* இந்த நேரத்தில் யாராவது என்னுடன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பது.

* மற்றவர்களின் நட்பை பார்த்து பொறாமைப்படுவது.

* மற்றவர்கள் நம்மை விலக்கி வைத்திருப்பதாக நினைப்பது.

* யாராவது அனுப்பிய குறுந்தகவலையோ, அவர்களுடன் பழகிய நாட்களையோ மறுபடியும், மறுபடியும் எண்ணி பார்ப்பது.

இவற்றில் எல்லாவற்றுக்கும் 'ஆமாம்' என்று நினைத்தால், நீங்கள் பயங்கரமான தனிமையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 
    
பாதிப்புகள்:

மனம் மட்டுமல்ல... உடலும் பாதிக்கும்

இரவில் தூக்கம் வராதவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் தனிமையில் இருப்பவர்களே. தனிமையில் இருப்பவர்களுக்கு மூளை எப்போதும் விழிப்புடனே இருக்கும். இதனால், தூக்கத்தில் 'திடீர்' என ஏதேனும் நினைப்பு வந்து தூக்கத்தை கலைத்துவிடும்.  தொடர்ந்து தூக்கம் வருவதில் சிரமங்கள் இருக்கும். எப்போதும் இறுக்கமாக உணர்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய தமணி வீக்கமடையும். முகத்தில் சிரிப்பு மறைந்து போகும்.
தனிமையிலிருந்து மீள வழிகள்:

தனிமையில் தவிப்பவர்கள், நம்மை கரையேற்ற யாரேனும் படகோடு வருவார்கள் என காத்திருக்காமல் எதிர் நீச்சலடித்து கரைச் சேர முயலவேண்டும்.ஏதேனும் செல்ல பிராணி வளருங்கள். அதனுடன் நேரத்தை செலவிடுங்கள்.  தினமும் புத்தகம் படிப்பது, நல்ல இசை கேட்பது, பழைய புகைப்பட ஆல்பங்களை பார்ப்பது, பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் வாரம் ஒரு முறை பேசுவது, பிடித்த வேலையில் ஈடுபடுவது தனிமையை போக்கும் அருமருந்துகள்.

பிறரை மகிழ்விக்க நம்மால் ஆன உதவிகளை செய்யலாம். ஏதேனும் சமூகத் தொண்டில் ஈடுபடுங்கள். இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்கு பயணிக்கலாம்

Tuesday, April 21, 2015

இணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்!



ந்த காலத்துல சாப்பாடு தண்ணி இல்லாமகூட வாழ்ந்துட்டு போகலாம். ஆனா, இண்டர்நெட், கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை நெனச்சுக்கூட பார்க்க முடியாது. அந்த வகையில இண்டர்நெட்டை உபயோகிப்பதில் இருக்கும் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்களை பார்த்து, ட்ரை செய்து என்ஜாய் பண்ணுங்களேன்...

1. கண்ட்ரோல் + ஷிஃப்ட் + T யை அழுத்தினால் கடைசியாக நீங்கள் க்ளோஸ் செய்த டேப் ஓபன் ஆகும். நீங்கள் மேக் சிஸ்டம் யூஸ் செய்யும் பட்சத்தில், கமெண்ட் + ஷிஃப்ட் + T யை அழுத்தவும். இது க்ரோம் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ்சில் மட்டும் செயல்படும்.

2. 'S' பட்டனை அழுத்திக்கொண்டே, உங்களுக்கு விருப்பமான புகைப் படத்தின் மீது, உதாரணத்திற்கு 'S' பட்டனை அழுத்திக்கொண்டே ஒரு குழந்தை படத்தின் மேல் கர்சரை வைத்து, மவுஸின் வலது பக்க பட்டனை அழுத்தினால், உடனடியாக பலதரப்பட்ட குழந்தைகளின் படங்கள் வரிசைகட்டி நிற்கும்.

அல்லது விரும்பிய படத்தின் மீது கரர்ஸரை வைத்து அப்படியே அந்த படத்தை நகர்த்தி சர்ச் டேப்பில் இழுத்துப் போட்டால் அதே போன்ற படங்கள் வந்து நிற்கும்.

3. daskeyboard.com  எனும் வலைத்தளத்துக்கு போய், ஹோம் பேஜின் அடியில் இருக்கும் கனெக்ட் கேட்டகிரியில் destroy this site என்பதை க்ளிக் செய்து அந்த வளைத்தளத்தை சுட்டு பொசுக்கலாம்.

4.  google in 1998 என சர்ச் பாரில் டைப் செய்தால், காலச் சக்கரத்தில் பின்னோக்கி போனதுபோல, ரெட்ரோ டைப் கூகுள் சர்ச் ஓபன் ஆகும்.

5. data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title> என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் பிரவுஸரையே நோட் பேடாக யூஸ் செய்ய முடியும்.

6. இதே விஷயத்தை  இரவு நேரத்தில் அல்லது வெளிச்சம் இல்லாத சமயத்துல பண்ணனும்னா இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

data:text/html;charset=utf-8,%20<title>Notepad%20(Nightmode)</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">

7. “do a barrel roll” என கூகுள் சர்ச் பாரில் டைப் செய்து நடக்கும் மேஜிக்கை பாருங்கள்.

8. “Atari Breakout” என கூகுள் இமேஜ் பாரில் டைப் செய்து, கிளாசிக் விளயாட்டை விளையாடி மலரும் நினைவுகளில் மூழ்கலாம்.

9. யு ஆர் எல் பாரில் எந்த ஒரு வார்த்தையும் டைப் செய்து கூடவே கன்ட்ரோல் + எண்டர் பட்டனை அழுத்தினால் அந்த வார்த்தைக்கு பொருத்தமான வலைத் தளங்கள் வரிசை கட்டும். அதாவது டாட் காம் என டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

10. ஒரு லிங்க்கை புது டேபில் ஓபன் செய்ய, கண்ட்ரோல் கீயை பிரஸ் செய்துகொண்டே அந்த லிங்கை க்ளிக் செய்தால் அது புது டேபில் ஓபன் ஆகும்.

மேக் சிஸ்டம் யூஸ் செய்பவர்கள் ஆப்பிள் அல்லது கமெண்ட் கீயை பிரஸ் செய்து லிங்க்கை க்ளிக் செய்தால் புதுடேபில் ஓபன் ஆகும்.

E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்!



நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E, 3G, H, H+ போன்ற Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

1) '2G' - இது 2G நெட்வெர்க் இண்டர்நெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

2) 'E' - இதுவும் 2G (2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இண்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89 மணி நேரமும் ஆகும். இந்த 'E' பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

3) '3G' - இது 3G மொபைல் இண்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இது இயங்க அவசியம் 3G இயங்குதள வசதியுடைய மொபைல் (Smart Phone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 6 மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18 மணி நேரத்தில் அனுப்பவும் இயலும்.

4) Symbol 'H' - இது 3G மொபைல் இண்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாம் 1GB dataவை 25 நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும்.

5) 'H+' - இதுவும் 3G மொபைல் இண்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5 முதல் 20 நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15 முதல் 39 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும்.

6) '4G' - இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution)  இது ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3 நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5 நிமிடம் மட்டுமே போதும். அடுத்த ஆண்டு