Powered By Blogger

Thursday, January 22, 2015

24 மணி நேரத்தில் தானாக அழியும் புத்தகம்!

புதிய புத்தகம் பற்றிய எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்துவதில் மேலை நாட்டு எழுத்தாளர்களுக்கு நிகர் அவர்களே தான். அதிலும் ஆன்லைன் யுகத்தில் புத்தகத்தின் டிஜிட்டல் தன்மையை அழகாக பயன்படுத்திக்கொள்ளும் கலையிலும் அவர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே மர்ம கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங் போன்றோர் மின்னூலை பலவகையில் புதுமையாக பயன்படுத்தியிருக்கும் நிலையில், பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் பேட்டர்சன், தனது புதிய நாவலுக்காக தானாக அழியும் புத்தகத்தை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.


நேர்த்தியான கதைகளுக்காக அறியப்படும் பேட்டர்சன்,  'பிரைவட் வேகாஸ்' ( Private Vegas) எனும் பெயரில் புதிய நாவலை எழுதியிருக்கிறார். ஏற்கனவே பல பெஸ்ட் செல்லர் நாவல்களை எழுதியுள்ள இவரது இந்த நாவல்,  வரும் 26 ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் ஒரு பிரதியை முன்கூட்டியே அதிர்ஷ்டசாலி வாசகருக்கு விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறார். இந்த புத்தகத்தை அந்த வாசகர் 24 மணி நேரத்தில் படித்து முடித்துவிட வேண்டும். ஏனெனில் 24 மணி நேரத்திற்கு பிறகு அந்த புத்தகம் தானாக அழிந்துவிடும்.

எல்லாம் சரி இந்த ஒற்றை புத்தகத்தின் விலை எவ்வளவு தெரியுமா? அதிகம் இல்லை, 294,038 டாலர்கள் தான். ஆனால் இந்த தொகையை செலுத்தினால் இன்னும் அறிவிக்கப்படாத ஒரு இடத்திற்கு விமானத்தில் சென்று நாவலாசிரியர் பேட்டர்சனுடன் விருந்து சாப்பிடபடி புத்தகத்தை படித்து மகிழலாம். ஆனால் 24 மணி நேரத்தில் முடித்து விட வேண்டும். அதன் பிறகு தானாக அழியும் புத்தகத்தின் கதையை கச்சிதமாக முடித்து வைக்க வெடிகுண்டு நிபுணர் குழுவுக்கு கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேட்டர்சனின் அதி தீவிர ரசிகர்கள், நாவலை முன்கூட்டியே படிக்க துடிப்பார்கள் என்றாலும், கிட்டத்தட்ட 3 லட்சம் டாலர்களை எல்லோராலும் கொடுக்க முடியுமா என்ன?

அந்த கவலையே வேண்டாம். அதிக தொகை தர முடியாது என நினைக்கும் வாசகர்கள் நாவலின் இபுத்தகத்தை முன்கூட்டியே பெற்று படிக்கலாம். இந்த மின்னூல் வடிவம் இலவசம்தான் என்றாலும் மொத்தம் ஆயிரம் புத்தகங்கள்தான் இப்படி வழங்கப்படும்.

இவற்றுக்கான ரகசிய குறியீடு முதலில் ஆன்லைனில் அளிக்கப்படும் . அதை பெறும் வாசகர்கள் புத்தகத்தை மின்னூலாக படித்து மகிழலாம். மின்னூலும் 24 மணி நேரத்தில் மாயமாகிவிடும் .
இப்படி முன்கூட்டியே மின்னூலை பெறும் வாசகர்களுக்கு வாசிப்பு செயலி ஒன்றும் அளிக்கப்படும் . அதன் மூலம் தங்கள் வாசிப்பை கணக்கிடலாம் என்பதுடன், மற்ற வாசகர்கள் எந்த நிலையில் இருக்கின்ற்னர் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

இலவச மின்னூலுக்கான ரகசிய குறியீடு வழங்குவதற்காக என்றே http://selfdestructingbook.com/#home எனும் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. ஏதோ வீடியோ கேமுக்கான இணையதளம் போல அது படு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏற்கனவே ரகசிய குறியீடு பெற்றவர்களின் பெயர் அதில் வரைபடத்தில் காட்டப்படுகிறது. ரகசிய குறியீடு இல்லாவிட்டாலும் மற்றவர்கள் எப்படி படிக்கின்றனர் என்பதை பார்த்து கொண்டிருக்கலாம்.

இது தவிர நாவலின் குறிபிட்ட சில அத்தியாயங்களை தனது இணையதளம் மூலம் ஏற்கனவே இலவசமாக வழங்கியிருக்கிறார். இதெல்லாம் இல்லையா? 26 ம் தேதி நாவலை வாங்கி படித்துப்பார்க்கலாம்.

டிஜிட்டல் யுகத்தில், புதிய புத்தகம் தொடர்பான ஆர்வத்தை வாசகர்கள் மத்தியில் எப்படி எல்லாம் ஏற்படுத்தலாம் என்பதற்கான வழியை ஜேம்ஸ் பேட்டர்சன் காட்டியுள்ளார்.

ஜேம்ஸ் பேட்டர்சனின் இணையதளம்: http://www.jamespatterson.com/index.php

Tuesday, January 20, 2015

மைக்கேல் ஜாக்சன் ஒரு வாழும் வரலாறு.......



மைக்கேல் ஜாக்ஸன் திடீர் அறிவிப்பொன்றை வெளியிட்டபோது சர்வ இசைலோகமும் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போனது. 12 வருடங்கள் கழித்து மீண்டும் மேடையில் லைவாக ஜாக்ஸன் என்று நினைக்கும்போதே ரசிகர்களுக்கு மயிர் கூச்செறிந்தது. 8 லட்சம் டிக்கெட்டுகளும் ஐந்து மணி நேரத்தில் சுடச்சுட விற்றுப்போயின. இத்தனைக்கும் ஒரு டிக்கெட்டின் விலை 5000 ரூபாய்

முதலில் ஏஓஎல் இணையத்தளத்தில்தான் மைக்கேல் ஜாக்ஸனின் மரணச் செய்தி வெளியிடப்பட்டது. சமீபகாலமாகவே நிறைய பெயின் கில்லர்களை உட்கொண்டு நடனப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். லண்டன் நிகழ்ச்சிக்காக விடாது ரிகர்ஸல் செய்ததில் உடல், மேலும் அவரைப் படுத்திக்கொண்டிருந்தது. உடல் முழுக்க விதவிதமான நோய்கள், குறைபாடுகள். அத்தனையும் சேர்த்து 26ம் தேதி அவர் மூச்சை நிறுத்தியது. வழக்கம்போல மற்றோரு வதந்தி என்று அரை நம்பிக்கையில் இருந்த ஜாக்ஸன் ரசிகர்கள் சர்வதேச பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் அந்த துக்கச் செய்தி உறுதி செய்யப்பட்டவுடன் நொடிந்துபோனார்கள். மைக்கேல் ஜாக்ஸனுக்கு முன்னால் மரணமடைந்த பாப் மாமேதை எல்விஸ் பிரிஸ்லி போலவே இளம்வயதில் மரணம் (வெளிநாட்டில் 50 வயது என்பது மிடில் ஏஜ்). எல்விஸ் போலவே உருவ மாற்றத்திலும் தீராப்பிணியிலும் சிக்குண்டு தடாலடியாக ஒருநாளில் மரணம். ரசிகர்கள் கதறியழுகை.

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான் கலைஞன் என்கிற முத்திரை எம்.ஜே என்று செல்லமாக அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்ஸனுக்கு உண்டு. தன் சகோதரர்களுடன் ஜாக்ஸன் 5 என்கிற குழுவில் இடம்பிடித்த ஜாக்ஸன் 16 வயதுமுதல் சோலோவாக ஆல்பம் தயாரித்து வந்தார். இவருடைய உச்சம், 1982ல் அதாவது தன் 24வயதில் வெளியிட்ட த்ரில்லர் ஆல்பம். இன்றுவரை உலகில் அதிகம் விற்கப்பட்டு
கின்னஸில் இடம்பிடித்த இசை ஆல்பம். 6.5 கோடி காப்பிகள். அவருடைய அத்தனை ஆல்பங்களும் இதுவரை 20 கோடி காப்பிகள் விற்றுள்ளன (1700 கோடி ரூபாய்க்கு விற்பனை). எந்த இசைக்கலைஞனாலும் எட்டமுடியாத சாதனை இது. இவர்போல இன்னொரு கலைஞன் இனியில்லை என்று ஏ.ஆர். ரஹ்மான் மைக்கேல் ஜாக்ஸன் இறந்த சில மணி நேரங்களில் அஞ்சலி அறிக்கை வெளியிட்டுள்ளார். எம்.ஜே இன்றி நாங்களில்லை என்கிறார்கள் பிரபுதேவாவும் பிரபல ஹிந்தி நடனக்கலைஞர் ஃபரா கானும். விமர்சனங்கள் மலிந்துள்ள இந்த உலகில் மைக்கேல் ஜான்ஸனின் திறமையையும் மதிப்பையும் கைநீட்டி குறை சொல்ல ஒருவரும் இல்லை என்பதுதான் எம்.ஜேவின் 30 வருட இசைப் பயணத்தின் தன்னிகரற்ற சாதனை.





மைக்கேல் ஜாக்ஸனின் பெரிய சொத்து, ரசிகர்களின் வெறித்தனமான அன்பு என்றாலும் கணக்கு வழக்குக்குச் சொல்லவேண்டுமென்றால் இதுவரை மைக்கேல் ஜாக்ஸன் என்கிற பிராண்ட் மூலமாக அவர் சம்பாதித்தது - 2500 கோடி ரூபாய். முக்கியமாக 1980 மற்றும் 1990களில் வருடத்துக்கு 250 கோடியை மிக எளிதாக சம்பாதித்து வந்தார். பாப் உலகுக்கு எம்.ஜேவை விட்டால் வேறு கலைஞனில்லை என்றிருந்த காலகட்டம் அது. ஆனால் இன்று மைக்கேல் ஜாக்ஸனின் கடன்தொகை 2500 கோடிக்குச் சென்று நிற்கிறது. எப்படி இப்படி ஆனது?

காசை கண்டபடி செலவு செய்து உல்லாசியாக வாழ்ந்தவர் என்றொரு அழுத்தமான குற்றச்சாட்டு மைக்கேல் ஜாக்ஸன் மீது உண்டு. லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் வாழ்ந்துவந்த வாடகை வீட்டின் மாத வாடகை மட்டும் 50 லட்சம். எங்கு சென்றாலும் இரண்டு தனி விமானங்கள். கூடவே இருபது உதவியாளர்கள். செலவுக்கும் வரவுக்கும் ஈடுகட்ட முடியாமல் 350 கோடி ரூபாயை பேங்க் ஆஃப் அமெரிக்காவிலிருந்து கடனாகப் பெற்றார் எம்.ஜே. பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற சமகால பாப் பாடகிகள் ஒரு பாப் ஆல்பத்துக்கு 25 கோடி ரூபாய் செலவிடுவார்கள் என்றால் 2001ல் வெளியிடப்பட்ட ’இன்விசிபிள்’ என்கிற தன் இறுதி ஆல்பத்துக்கு எம்.ஜே செலவிட்ட தொகை 125 கோடி. சமீபத்தில் நியூயார்க்கில் ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் சில மணி நேரங்களில் தங்கியதற்கு எம்.ஜே செலுத்திய பில்லின் தொகை 5 கோடி. ஒருமுறை லாஸ் வேகாஸில் உள்ள ஒரு கடையில் 5 லட்சத்துக்கு செண்ட் பாட்டில் வாங்கியிருக்கிறார். இப்படி உல்லாச வாழ்க்கைக்குரிய தினசரி நடவடிக்கைகள், கோர்ட் செட்டில்மெண்டுகள், வருமான வரி, ஊழியர்கள் சம்பளம், அதீதப் போக்குவரத்துச் செலவு, சொத்துக்களின் பராமரிப்புச் செலவுகள் போன்ற காரணங்களால் வரவு எட்டணா செலவு பத்தணா என்கிற வாழ்க்கையையே இறுதிவரை வாழ்ந்து வந்தார் மைக்கேல் ஜாக்ஸன். ஆல்பம் ிற்பனையில் இன்றைக்கும் எம்.ஜேவுக்கு ஒவ்வொரு வருடமும் 100 கோடி ருபாய் வருமானம் ராயல்டியாகக் கிடைக்கிறது. ஆனால் அவருடைய ஒரு வருட செலவு 150 கோடி ரூபாய் என்பதால் இறக்கும்போது ‘2500 கோடி ரூபாய் கடனாளி’ என்கிற கெட்டப்பெயர் அவருக்குக் கிடைத்துவிட்டது.

செலவு தாக்குப் பிடிக்காமல் தீம் பார்க் மற்றும் உயிரியல் பூங்கா போன்ற உல்லாச வசதிகள் கொண்டிருந்த தனது அழகான 2500 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெவர்லேண்ட் பண்ணையை முதலில் அடமானத்துக்கு வைத்து பிறகு விற்பனை செய்துவிட்டார் எம்.ஜே. அந்தப் பண்ணையில்தான் அவர் சிறுவர்களுடன் தவறாக ாரியங்களில் ஈடுபடுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததால் வெறுத்துப்போய் அதை விற்று மனச்சுமையின்றி சிறிது காலம் வாழ எண்ணினார். தன் வீட்டு நிலங்கள், சோனியுடனான பங்குகள் என்று மைக்கேல் ஜாக்ஸனின் சொத்து மதிப்பு 500 கோடி என்று அறியப்பட்டாலும் அந்தப் பணத்தைக் கொண்டு உடனடியாகக் கடனை அடைக்கமுடியாது என்பதால் பண்ணையிலிருந்த தன் ஆயிரம் உடைமைகளை ஏலத்தில் விற்க முதலில் அனுமதித்தார் எம்.ஜே. 15 கோடிவரை அவருடைய பொருள்கள் விலைபோகும் என்றும் அவரது கிளவுஸ் மட்டும் 10 லட்சத்துக்கு ஏலம் போகும் என்றும்
ஏலவிற்பனை பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. பிறகு என்ன நினைத்தாரோ திடீரென ஏல திட்டத்தை தடுத்து நிறுத்திவிட்டார். இதனால் இறுதிவரை ஜாக்ஸனின் வட்டிக்கடன் நாளுக்கு நாள் குட்டிப் போட்டுக்கொண்டே போனது. தன் பாடல்கள் உரிமை மற்றும்
பிரபல பாப் குழுவான பீட்டில்ஸின் பாடல்கள் உரிமை (சோனியுடனான கூட்டு உரிமை) ஆகிய இவ்விரு உரிமங்கள் மட்டுமே கடைசிக்காலத்தில் எம்.ஜேவுக்கு தொடர்ந்து வருமானம் கொடுத்துக்கொண்டிருந்தன.

மேற்கு நாட்டில் சர்ச்சைகளில், வம்பு வழக்குகளில் சிக்காத இசைக்கலைஞர்களே கிடையாது. அதிலும் மைக்கேல் ஜாக்ஸன் அத்தனை பேருக்கும் பெரியண்ணன் என்றுகூடச் சொல்லலாம்.






அது ஒரு ஷேம் ஷேம் பப்பிஷேம் விவகாரம். விசிறி என்றுதான்ஆரம்பத்தில் எம்.ஜேவுடன் அறிமுகமானார் இவான் சண்ட்லர். சில மாதங்களில் இவான் எம்.ஜேவின் நெருங்கிய நண்பரானார். எம்.ஜேவின் வீட்டுக்கு அடிக்கடி இவானின் 13 வயது மகன் ஜார்டன் வர ஆரம்பித்தான். அவனும் ஒரு மைக்கேல் ஜாக்ஸன் பித்து. திடீரென ஒருநாள், மைக்கேல் ஜாக்ஸன் என் மகனை கெடுத்துவிட்டார் என்று இவான் ஊரைக் கூட்டியபோது சீச்சீய் என்று எம்.ஜே ரசிகர்கள் முகம் சுழித்தனர். ஆம். என் மகனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார். ஆணுறுப்பை வருடியிருக்கிறார். இன்னும் என்னென்னவோ அசிங்கங்கள் அவருக்கும் என் மகனுக்கும் இடையே நடந்துள்ளன என்று கூப்பாடு போட்டு நீதிமன்றத்தை நாடியபோது மைக்கேல் ஜாக்ஸனின் பரிசுத்த ஆவி இமேஜ் அந்த தருணத்தில் தகர்ந்துபோனது. ஒருவழியாக 110 கோடி ரூபாயை இவானின் கையில் திணித்து பிரச்னையைச் சரிகட்டினார் எம்.ஜே. இந்தச் சமயத்தில் எம்.ஜேவின் பால்யகால தோழியும் எல்விஸ் ிரிஸ்லியின் மகளுமான லிசா மேரி, எம்.ஜேவுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது அப்படியே அவரை எம்.ஜேவின் மனைவியாகவும் ஆக்கியது. இந்த பந்தம் ஒன்றரை வருடங்கள் நீடித்தன. பிறகு, தன் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்த செவிலி, ஜியான் ரோவை முதலில் கர்ப்பமாக்கிவிட்டு பிறகு திருமணம் செய்துகொண்டார் எம்.ஜே. இந்த உறவும் இரண்டு வருடத்திற்குள் காலாவதியாகிப் போனது. ரோவுடனான உறவுக்குப் பரிசாக ஜாக்ஸனுக்கு இரண்டு குழந்தைகள். மனைவி இல்லாவிட்டால் என்ன என்று வாடகைத் தாய் மூலமாக மூன்றாவது குழந்தையைப் பெற்றுக்கொண்டார் எம்.ஜே. ஆனால் மூன்றாவது மகனின் தாயை இறுதிவரை வெளி உலகுக்குக் காட்டவில்லை. தன்மூன்று குழந்தைகளுக்கும் தாயும் தகப்பனுமாக தானே இருந்து அக்கறையாக வளர்த்து வந்தார்.

2005லும் ஒரு பாலியல் பிரச்னை எம்.ஜேவின் இமேஜை உலுக்கியெடுத்தது. ஒரு டாகுமெண்டரிக்காக கவின் அர்விஸோ என்கிற 13 வயது சிறுவனுடன் இணைந்து பேட்டி கொடுத்த எம்.ஜே, கவின் தன்னுடைய நெருக்கமான நண்பன் என்றும் இருவரும் ஒரே படுக்கையில்தான் துயில்வோம் என்றும் வெள்ளந்தியாகப் பேசிவைக்க அது கவினின் பெற்றோரைக் கலவரப்படுத்தியது. அடுத்த சில நாள்களில் எம்.ஜே மீதான மற்றொரு பாலியல் தொந்தரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ழக்குக்காகக் கைதானார் எம்.ஜே. இரண்டு வருடங்கள் கழித்து நிரபராதி என்கிற முத்திரையோடு வழக்கிலிருந்து விடுபட்டார் எம்.ஜே. ஆனால், ’ஆண்களுடன் குறிப்பாக சிறுவர்களுடன் படுக்கையில் ஒன்றாகப் படுப்பது செளகரியமாக இருக்கிறது’ என்று டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி அவர்மீதான கறையை மேலும் ளிச்சென்று காட்டியது.





பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பிறகு அமெரிக்காவை வெறுத்தார் அவர். தன் இறுதி மூச்சை பஹ்ரைனில் விடவேண்டும் என்று விரும்பினார். திடீரென்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இன்றுமுதல் நான் ஒரு முஸ்லீம். இனி என்னை எல்லோரும் மிகயில் என்று அழைக்கவும். மெரிக்க வாழ்க்கையை விட்டொழித்துவிட்டு நான் நிரந்தரமாக பஹ்ரைனில் குடியேறப் போகிறேன் என்றார் தீர்மானமாக. பஹ்ரைன் நாட்டு மன்னரின் இரண்டாவது மகனான சைக் அப்துல்லாவும் எம்.ஜேவும் சிறிது காலம் முஸ்தபா முஸ்தபா பாடிக்கொண்டிருந்தார்கள். அந்த நட்பு வேகத்தில் அப்துல்லாவுக்கு கண்மூடித்தனமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார் எம்.ஜே. நிச்சயம் உங்களுக்காக ஒரு ஆல்பம், என் வாழ்க்கை வரலாறை நீங்கள்தான் வெளியிடுகிறீர்கள். இவ்வாறு சொல்லிக்கொண்டு என்னிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் என்று பஹ்ரைன் இளவரசர் திடீரென ஒருநாள் 38 கோடிக்கு எம்.ஜே மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தது எம்.ஜேவின் பஹ்ரைன் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

வழக்கு விவகார தருணங்களில் தன் உடல் நிலையை மிகவும் மோசமாக்கிக்கொண்டார் எம்.ஜே.1979ம் ஆண்டு முதலே தன் உடலை சித்ரவதை செய்துகொண்டு அல்லது தன் உடலால் சித்ரவதைப்பட்டு வருகிறார் ஜாக்ஸன். 21வது வயதில் மேடை நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் காயம்பட்ட ஜாக்ஸன் தன் மூக்கின்
அமைப்பை கொஞ்சம் தட்டி, ஒட்டி சரிசெய்துகொண்டார். நம் ஊரில் ஸ்ரீதேவி தன் முக அமைப்பை மாற்றியமைத்துக்கொண்டாரே அதேபோல. 80களில் ஜாக்ஸனுக்கு 'விட்டிலிகோ’ எனப்படும் வெண்தாமரை நோயில் சிக்கினார். அவர் உடலெங்கும் வெள்ளைத் திட்டுகள் தென்பட ஆரம்பித்தன. இந்த தோல் நோயின் தீவிரம் அதிகமாகி அவர் முகத்தின்
தன்மையையே மாற்றியமைத்தது. கறுப்பு நிறத்தால் ஏற்கனவே
தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்த எம்.ஜேவும் சும்மா இருக்காமல் முகத்தில் நான்கு இடங்களில் உருவ மாற்ற அறுவை சிகிச்சை செய்து பல ஊசிகள், மருந்துகள் உட்கொண்டு பால் வெள்ளை தோலுக்காக மேலும் மேலும் தன் முகத்தை ரணமாக்கிக்கொண்டார். அடிக்கடி வழக்குகளுக்காக கோர்ட்டுக்கு சென்ற அலைச்சலில் சரியாகச் சாப்பிடாமலும் இருந்தார். சைவத்துக்கு மாறிய அவர் ெலிதான உடற்கட்டை பாதுகாக்க சாப்பிடுவதையே ெறுத்து ஒதுக்கினார். மருந்தே உணவென வாழ்ந்த அவருடைய எடை ருகட்டத்தில் 48 கிலோ அளவுக்குக்கூட குறைந்திருக்கிறது. கடைசிக்கால கட்டத்தில் அவருக்குப் புற்று நோய், நுரையீரல்
பாதிப்பு போன்ற பெரிய நோய்களும் தாக்கவே பல வருடங்கள் வீட்டுக்குள்ளேயே சுருண்டுக் கிடக்க வேண்டிய நிலைமை வந்தது.





ராணுவத்தினர் அணியும் சீருடைகளில் மாற்றம் செய்து அணிவது, கைகளில் க்ளவுஸ், உடைகளில் வைரம் பதிப்பது, ஷார்ட் பேண்ட்… இப்படி ஜாக்ஸன் அணிந்த உடைகள் அனைத்தும் நாகரிக ாற்றத்தின் ஆரம்பமாக, ஃபேஷன் அடையாளமாக அமைந்தன. த்ரில்லர், பேட், டேஞ்சரஸ், பில்லி ஜீன் போன்ற ஆல்பங்கள் எல்லாம் இன்றைக்கும்
இளைஞர்களுக்கு இசை போதை. நெற்றிமுன் சரிந்து விழும் கற்றைமுடியோடு மைக்கேல் ஜாக்ஸன் மேடையில் பிரசன்னமானவுடனே கடவுளை நேரில் பார்த்ததுபோல ரசிகர்கள் நெக்குருகிப் போய்க் கதறி அழுவார்கள். காட்டுக்கூச்சல் போடுவார்கள். அப்படியொரு பரவச அழுகை, மயிர்க்கூச்செரிப்பு இனி வாய்க்கப்போவதில்லை. இனியொரு 'பேட்’ பாயை இந்த நூற்றாண்டு சந்திக்கப்போவதில்லை.

  





Thursday, January 15, 2015

உலகின் டாப் 10 போதை பொருள்கள் : WORLD'S TOP 10 DRUGS !

உலகின் டாப் 10 போதை பொருள்கள் : WORLD'S TOP 10 DRUGS !


சில போதை வஸ்துக்கள் நமக்கு மிகவும் தீமையான மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை நம் உடலில் ஏற்படுத்தும் என எண்ணிலடங்கா ஆய்வுகள் உறுதி செய்துள்ளது. அடிமையாவது என்பது பொதுவாக மூளை சம்பந்தப்பட்ட நோயாகும். ஆனால் ஹெராயின் மற்றும் மீதம்ஃபீடமைன் போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்தினால், அதன் தாக்கங்கள் மூளையோடு நின்றுவிடுவதில்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் ரீதியான சிக்கல்களும் கூட எழலாம். உலகத்தில் உள்ள மிக ஆபத்தான போதை வஸ்துக்களைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். உலகத்தில் உள்ள ஆபத்தான சில போதைப் பொருட்கள், நம்மை அடிமையாக்கும் போதைப் பொருட்களின் பட்டியலிலும் இடம் பெறுகிறது.

இவ்வகை போதைப் பொருட்களை பயன்படுத்துவது பல நாடுகளில் சட்ட விரோதம் என்றாலும் கூட, போதிய சட்டமின்மை மற்றும் போதிய கைது நடவடிக்கைகள் இல்லாததால், போதைக்கு அடிமையாகும் பிரச்சனை பெரியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகத்தில் உள்ள ஆபத்தான போதைப் பொருட்களை பற்றி இப்போது பார்க்கலமா? "உலகத்தில் உள்ள மிக கொடிய போதைப் பொருட்கள்" என்ற அடைமொழிக்கு கீழும் இவைகளை கொண்டு வரலாம்.

இதோ உலகத்தில் உள்ள மிகவும் தீங்கான 10 போதை பொருட்கள்... தொடர்ந்து படியுங்கள்! ஆபத்தின் விளைவை கொண்டு ஏறுவரிசையில் அவைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.


மரிஜுவானா

மரிஜுவானா என்பது பெரும்பாலும் ஒரு பொழுதை கழிக்கும் போதை பொருளாகும். இந்த பட்டியலில் இதுவும் இடம் பிடித்திருந்தாலும் கூட மற்ற போதை பொருட்களின் ஒப்பிடுகையில் இதனை பெரும்பாலும் காண முடிவதில்லை. இருப்பினும், இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துவதன் காரணத்தினால் இதுவும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.




MDMA

எக்ஸ்டஸி (மெய்மறந்த இன்பம்) என பொதுவாக அழைக்கப்படும் MDMA என்பதும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. பல நாடுகளில் இதனை பயன்படுத்துவது சட்ட விரோதமானது. இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், உங்கள் மத்திய நரம்பியல் அமைப்பை அது வெகுவாக பாதிக்க கூடும். MDMA என்பது பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான போதை பொருளாகும். இது நெருக்க உணர்வை ஏற்படுத்தி நன்னிலை உணர்வு தூண்டி விடும். அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் ஆபத்தில் போய் முடியும்; குறிப்பாக, மதுபானத்துடன் சேர்ந்து பயன்படுத்தினால்.



கேட்டமைன்

உலகத்தில் உள்ள மிக தீங்கான போதை பொருட்களின் பட்டியலில் அடுத்த வருவது கேட்டமைன். இதனை சிறிது காலத்திற்கு பயன்படுத்தி வந்தாலே போதும், அது சித்தப் பிரமையை தூண்டி விடும். பிரமைகள் என்ற நூதனக் காட்சிகள் கேட்டமைனுடன் சம்பந்தப்பட்டுள்ளது.



கிரிஸ்டல் மெத்

ப்ரேகிங் பேட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு இந்த போதை பொருள் பெரியளவில் புகழை அடைந்துள்ளது. கிரிஸ்டல் மெத் பல அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் மூளையின் செயல்பாட்டை தான் பெரிதும் பாதிக்கிறது. இதனை அடிக்கடி பயன்படுத்தினால் பிரமை, ஞாபக மறதி மற்றும் இதர தாக்கங்களையும் ஏற்படுத்தும். இதை பயன்படுத்துவதை நிறுத்தினாலும் கூட அதன் தாக்கங்கள் கடுமையாகவே இருக்கும்.



கோகைன்

புகழ் பெற்ற பார்ட்டி போதைப் பொருளான கோகைன், மிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் அடுத்த இடத்தை பிடிக்கிறது. அதிகமாக அடிமைப்படுத்தும் போதை பொருட்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. இது அதிக அளவிலான டோப்பமைன் என்ற மூளை உண்டாக்கும் நல்ல உணர்வை ஏற்படுத்தும் ரசாயனத்தை வெளியேற்றும். இதன் பயன்பாட்டை நிறுத்தினால், அதன் தாக்கங்களை எடுத்துக் கொள்வதும் கஷ்டமாக இருக்கும். இதனால் மன ரீதியாக ஏற்படும் பாதிப்பை தவிர உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும்.



ஆல்கஹால்

அதிக அளவிலான விபத்துக்களுக்கு காரணமாக இருக்கும் அல்கஹால், இங்குள்ள அனைத்து போதைப் பொருட்களை விட ஆபத்தானவையாக கருதப்படுகிறது.





புகையிலை

மரணங்களின் எண்ணிகையை பொருத்தவரை, உலகத்திலேயே மிக கொடிய போதை பொருளாக புகையிலை கருதப்படுகிறது. மரிஜுவானா மற்றும் இதர பொழுபோக்கு போதைப் பொருட்களை விட இது மோசமானதாகும். பல நாடுகளில் அரசாங்கத்திற்கு பெரிய அளவிலான வருவாயை ஈட்டித்தடும் மூலமாகவும் இது விளங்குகிறது. அதனால் தான் என்னவோ இது இன்னமும் சட்ட விரோதம் ஆக்கப்படவில்லை.

LSD

சக்தி வாய்ந்த மாயத்தோற்ற போதைப் பொருளாக விளங்குகிறது LSD (லைசெர்ஜிக் ஆசிட் டைதிலமைத்). இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் மிக கொடிய, மீள முடியாத சித்த பிரம்மையை உண்டாக்கி விடும். பிரம்மை மற்றும் மருட்சியையும் இது தூண்டி விடும். ஒரு முறை பயன்படுத்தினால், இதனால் ஏற்படும் போதை 12 மணி நேரத்திற்கு நீடிக்கும்.



ஹெராயின்

போதைப் பொருட்களின் ராணியாக அறியப்படும் ஹெராயின் தான் இந்த உலகத்தில் உள்ள மிகவும் தீங்கான போதை பொருளாக கருதப்படுகிறது. ஹெராயின் பயன்படுத்தியுள்ள போது, மூளையில் வெளிப்படுத்தப்படும் டோப்பமைனின் அளவு புணர்ச்சி பரவச நிலையின் போது வெளிப்படுவதை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும். ஹெராயின் பழக்கத்தை நிறுத்துவதால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க மீதம்ஃபீடமைன் போன்ற மிதமான போதைப் பொருட்களை லேசாக பயன்படுத்த வேண்டி வரும். இந்த பழக்கத்தை நிறுத்துகையில் அது மரணத்தில் போய் முடிகிறது என பல சான்றுகள் கூறுகிறது. இதனை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தி வந்தால், மூளையில் உண்டாகும் தாக்கங்களை மறுபடியும் சீர்படுத்த முடிது.



ஸ்பீட்பால்

ஹெராயின் மற்றும் கோகைனின் மரண சேர்க்கை தான் ஸ்பீட்பால். இது உங்களை மற்றொரு புதிய கோணத்திற்கே அழைத்துச் செல்லும். ஹெராயினுக்கு அடிமையானவர்களுக்கு அதிலிருந்து போதிய போதை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் ஸ்பீட்பாலை விரும்புவார்கள். ஸ்பீட்பாலை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் மரணம் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானப்படைகள்

1912ல் இங்கிலாந்து நாட்டின் ராயல் ஃப்ளையிங் கார்ப்ஸ் உருவாகியது முதல், ராணுவ நடவடிக்கைகளுக்கு விமானப் படையின் பங்கு இன்றிமையாதது என்பதை பல்வேறு உலக நாடுகள் உணர்ந்து கொண்டு விமானப் படைகளை உருவாக்கின.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டிலிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எளிதாக எதிர்கொள்வதற்கு விமானப் படையின் பங்கு ஒவ்வொரு நாட்டிற்கும் அத்தியாவசிமாகியுள்ளது. உணவு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், ராணுவத்துக்கு சில நாடுகள் அதிக அளவில் நிதியை ஒதுக்கி தங்களது பாதுகாப்பை உறதி செய்து கொள்கின்றன.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய போர் விமானங்களை பல நாடுகள் போட்டி போட்டி வாங்கியும், சொந்தமாக தயாரித்தும் தங்களது விமானப் படையை வலுவாக்கி வைத்திருக்கின்றன. அதில், அதிக போர் விமானங்களை கொண்ட உலக நாடுகளின் விமானப் படையின் பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம்.
1. அமெரிக்கா

உலகின் மிக பலம் வாய்ந்த விமானப் படை அமெரிக்காவினுடையதுதான். 1947ல் அமெரிக்க ராணுவத்திலிருந்து விமானப் படை தனியாக பிரிக்கப்பட்டது. 3,318 போர் விமானங்கள் அமெரிக்க விமானப்படையில் இருக்கின்றன. இதில், எஃப் 16 என்ற ஒரே வகையில் மட்டும் 1,245 போர் விமானங்களை வைத்துள்ளது.

2. ரஷ்யா
மிகோயன் மிக்-31 

கடந்த 1992ம் ஆண்டு பழைய சோவியத் யூனியன் விமானப்படையிலிருந்து ரஷ்யாவின் புதிய விமானப் படை உருவாக்கப்பட்டது. கடந்த 1990ம் ஆண்டில் சோவியத் யூனியனாக இருந்தபோது 6,100 போர் விமானங்கள் இருந்தன. ஆனால், தற்போது ரஷ்ய விமானப் படையில் 1,900 போர் விமானங்கள் உள்ளன. இதில், மிகோயன் மிக்-31 ரக போர் விமானம் மணிக்கு 3,000 கிமீ வேகத்தில் பறக்க வல்லது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானப் படையாக இருக்கிறது.

3. சீனா
ஜே11 

சீன விமானப் படையில் 1,500 போர் விமானங்கள் உள்ளன. மேலும், சீன விமானப் படையில் 3,30 லட்சம் வீரர்களும் உள்ளனர். மொத்தமாக சீன ராணுவத்தில் 2,500 விமானங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சொந்தமாகவே போர் விமானங்களையும், குண்டுகளை வீசும் பிரத்யேக விமானங்களையும் தயாரிக்கும் வல்லமை கொண்டது. அதில் ஷென்யாங் ஜே11 மற்றும் ஸியான் எச்-6 ஆகிய விமானங்கள் 9,070 கிலோ எடையுடைய குண்டுகளை சுமந்து சென்று வீசும் திறன் கொண்டது. இதுபோன்ற விமானங்கள் உலகின் சில விமானப் படைகளிடம் மட்டுமே உள்ளது.

4. இந்தியா

சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய விமானப் படை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. போர் விமானங்களை அசெம்பிள் செய்யும் வல்லமை கொண்ட நாடாக இருக்கிறது. சுகோய் ரக விமானங்களை ரஷ்யாவிடமிருந்து உரிமம் பெற்று இந்தியா அசெம்பிள் செய்து தயாரித்துள்ளது. மேலும், தற்போது சொந்தமாக போர் விமானத்தை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. தற்போது தேஜஸ் என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரித்து சோதனைகளை நடத்தி வருகிறது. இந்திய விமானப் படை 1.27 லட்சம் வீரர்களை கொண்டுள்ளது.

5.எகிப்து
எஃப்16

எகிப்து விமானப் படையில் மொத்தம் 1,300 போர் விமானங்களும், 50,000 வீரர்களும் உள்ளனர். எகிப்து விமானப் படையில் எஃப்16 வகை விமானங்கள் அதிகளவில் உள்ளன.

6.வடகொரியா

பல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் வடகொரிய விமானப் படையில் 661 போர் விமானங்கள் இருக்கின்றன. சீன தயாரிப்பு போர் விமானங்களும், சில ரஷ்ய தயாரிப்பு போர் விமானங்களும் வடகொரியாவிடம் உள்ளன. ஆனால், இவற்றில் பல விமானங்கள் இயக்குவதற்கான தகுதி இல்லாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

7. பாகிஸ்தான்

1947ல் துவங்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படையில் தற்போது 502 போர் விமானங்கள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் விமானப்படையில் சீன தயாரிப்பான செங்க்டு ஜே-7 அதிகளவில் உள்ளன. தவிர, எஃப்- 16 மற்றும் பிரானஸ் தயாரிப்பான மிராஜ்- 5 மற்றும் மிராஜ்-3 ஆகிய போர் விமானங்களும் உள்ளன.

8. துருக்கி

தனது பிராந்தியத்தில் ராணுவ பலம் வாய்ந்த நாடாக துருக்கி திகழ்கிறது. 4 லட்சம் வீரர்களை கொண்ட பலம் வாய்ந்த ராணுவ பலம் பொருத்திய துருக்கி விமானப் படையில் 465 போர் விமானங்கள் உள்ளன. மற்ற டாப்- 10 நாடுகளை விட குறைவான போர் விமானங்களை கொண்டிருந்தாலும், பலம் வாய்ந்த ராணுவத்தை கொண்டிருப்பதால் பட்டியலில் 8ம் இடத்தை பிடித்துள்ளது. துருக்கி விமானப் படையில் எஃப்- 16 விமானங்கள் அதிகளவில் உள்ளன.

9. தென்கொரியா

அண்டை நாடுகளிடமிருந்து வந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதத்தில் 1949ல் தென்கொரிய விமானப் படை துவங்கப்பட்டது. அமெரிக்க தயாரிப்பான எஃப்-16 மற்றும் நார்த்ராம் எஃப் ஆகிய போர் விமானங்கள் அதிகளவில் உள்ளன. இதுதவிர, பல ரக விமானங்களையும் தென்கொரிய விமானப் படை வைத்துள்ளது.

10. ஜெர்மனி

இங்கிலாந்து ராணுவத்தை விட சிறியதாக இருக்கும் ஜெர்மனி விமானப் படையில் மொத்தம் 423 போர் விமானங்கள் உள்ளன. 1955 வரை ஜெர்மனி விமானப்படை வைத்துக்கொள்வதற்கான தடை இருந்து வந்தது. நேட்டோ அணியில் சேர்ந்தபின் விமானப் படையை உருவாக்கிக் கொண்டது. ஜெர்மனி விமானப் படையில் நவீன ரக யூரோஃபைட்டர் தைபூன் மற்றும் பிரபல பனவியா டோர்னாடோ ஆகிய விமானங்கள் உள்ளன.